tamilnadu

img

சிபிஎம் காஞ்சிபுரம் மாவட்டச் செயலாளராக கே. நேரு தேர்வு

குன்றத்தூர், நவ. 18 – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் காஞ்சிபுரம் மாவட்டச் செயலாளராக கே. நேரு தேர்வு செய்யப்பட்டார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் காஞ்சிபுரம் மாவட்ட 24-ஆவது மாநாடு, படப்பையில் தோழர்கள் என். சங்கரய்யா, சீத்தாராம் யெச்சூரி நினைவரங்கத்தில் நவம்பர் 17, 18 தேதிகளில் நடைபெற்றது. மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே. நேரு தலைமை வகித்தார். மாவட்டச் செயற்குழு உறுப்பினர் பி. ரமேஷ் செங்கொடியை ஏற்றி வைத்தார். வரவேற்புக் குழு செயலாளர் கே.  புருஷோத்தமன் வரவேற்க, மாவட்ட செயற்குழு உறுப்பினர் டி. ஸ்ரீதர்  அஞ்சலி தீர்மானத்தை முன்மொழிந் தார். சிபிஎம் மாநில செயற்குழு உறுப்பி னர் எஸ். கண்ணன்  மாநாட்டைத் துவக்கி வைத்துப் பேசினார்.  மாவட்டச் செயலாளர் சி. சங்கர் வேலை அறிக்கையையும், மாவட்ட  செயற்குழு உறுப்பினர் ஆர். மது சூதனன் வரவு - செலவு அறிக்கையை யும் முன்வைத்தனர். மாநிலக்குழு உறுப்பினர் ஆர்.பத்ரி, இ. முத்துக்குமார் ஆகியோர் மாநாட்டை வாழ்த்திப் பேசினர். மாநிலக்குழு உறுப்பினர் ஐ.ஆறுமுக நயினார் நிறைவுரை யாற்றினார். வரவேற்பு குழு பொரு ளாளர் ஆர். நந்தகோபால் நன்றி  கூறினார்.  புதிய மாவட்டக்குழு தேர்வு இந்த மாநாட்டில் 25 பேர் கொண்ட மாவட்டக்குழு தேர்வு செய்யப்பட்டது. மாவட்டச் செயலாளராக கே. நேரு  தேர்ந்தெடுக்கப்பட்டார். இ. முத்துக்குமார், சி. சங்கர், பி. ரமேஷ்,  ஆர். மதுசூதனன், டி. ஸ்ரீதர், ஆர். சௌந்தரி ஆகியோர் மாவட்டச் செயற்குழு உறுப்பினர்களாக தேர்ந் தெடுக்கப்பட்டனர். தீர்மானங்கள்  படப்பை பஜாரில் ஓராண்டுக்கு மேலாகியும் முடிக்கப்படாமல் உள்ள மேம்பாலப் பணியை விரைந்து முடிக்க வேண்டும்; காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டங்களிலும் அரசு பொது மருத்துவமனை அமைக்க வேண்டும். பாலாற்றுக் குறுக்கே விவசாயத்திற்கும், குடிநீர் தேவைக்கும் மக்களுக்கு பயன்படும் வகையில் ஆங்காங்கே தடுப்பணை அமைத்துத்தர வேண்டும்; உத்திர மேரூர் வட்டம், மருதம் கிராமத்தில் சிப்காட் அமைக்க 750 ஏக்கர் கையகப ப்படுத்துவதை தமிழ்நாடு அரசு கைவிட வேண்டும்; ஒருங்கிணைந்த நிலம் எடுப்பு சட்டம் 2023ஐ திரும்பப் பெற வேண்டும்.  தொழிற்சாலைகளில் தொடர்ந்து கொண்டிருக்கும் தொழிலாளர் போராட்டங்களில் தமிழ்நாடு அரசு தலையிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன.