சென்னை,பிப்.29 வரும் மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு தென்னிந்தியாவில் மிகப்பெரிய பூஜ்யம் தான் கிடைக்கும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீத்தா ராம் யெச்சூரி கூறினார். செங்கல்பட்டில் வியாழனன்று (பிப்.29) கட்சியின் பேரவைக்கூட் டத்தில் உரையாற்ற வந்த அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், எங்களது கட்சியைப் பொறுத்தவரை வரும் மக்களவைத் தேர்தல் மிக மிக முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக கருதுகிறோம். ஏனென்றால் இந்தியா வில் தேர்தல் ஜனநாயக முறை நீடிக்குமா என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது என்றார்.
தமிழ்நட்டிற்கு மோடி அடிக்கடி வருவது ஏன்?
அரசமைப்புச் சட்டத்தின் அடிப்ப டையில் மதச்சார்பற்ற ஜனநாயகத் தன்மை கொண்ட நாடாக இந்தியா நீடிக்க வேண்டும் என்பதே முதன்மை இலக்கு. அதனை உறுதிப்படுத்த வேண்டும் என்றால் ஆட்சி அதி காரத்தில் இருந்து பாஜக அகற்றப்பட வேண்டும். தற்போதைய பாஜக அரசு மதச்சார்பற்ற இந்தியாவை பாசிசத் தன்மை கொண்ட, இந்துத்துவா தன்மை கொண்ட இந்தியாவாக மாற்ற முயற்சிக்கிறது. எனவேதான் பிரதமர் மோடி தொடர்ந்து தென்னிந்தியா வுக்கு, குறிப்பாக தமிழகத்திற்கு பய ணம் மேற்கொண்டுள்ளார். தமிழ கத்தை பொறுத்தவரை பாஜகவை மக்கள் நன்கறிந்துள்ளனர். மக்க ளவைத் தேர்தலில் தென்னிந்தியாவில் பாஜகவுக்கு மிகப்பெரிய பூஜ்யம் தான் கிடைக்கும் என்பதை நாம் அறிவோம். அக்கட்சியும் நன்கறியும்.
ஊழல்வாதிகளின் கூடாரம் பாஜக
தென்னிந்தியாவில் எப்படியாவது ஊடுருவ வேண்டும் என்பதற்காக பாஜக ஊழல்குற்றச்சாட்டுக்கு ஆளான பலரை கட்சியில் சேர்த்து வருகிறது. பாஜகவில் சேர்ந்த பிறகு அவர்கள் மீதுள்ள ஊழல் வழக்குகள் கைவிடப்படுகின்றன. அவர்கள் எவ்வளவு பெரிய ஊழலை செய்திருந் தாலும் பாஜகவில் சேர்ந்துவிட்டால் ‘உண்மையை மட்டுமே பேசக்கூடிய அரிச்சந்திரனாக’ மாறிவிடுகிறார்கள். இத்தகைய இழிவான அரசியலை பாஜக தற்போது நாடுமுழுவதும் கடைப்பிடித்துக் கொண்டிருக்கிறது. பாஜகவை மீண்டும் ஆட்சியில் அமர்த்த மக்கள் தயாராகிவிட்டார்கள் என்று பிரதமர் வேண்டுமானால் பேசி கொண்டிருக்கலாம். ஆனால் தமி ழகம் மற்றும் புதுச்சேரியில் பாஜக வுக்கு ஒரு தொகுதிகூட கிடைக்கக் கூடாது என்பதில் மக்கள் மிகவும் உறுதி யாக உள்ளனர். இந்த நிலையில் தமிழகத்தில் திமுக தலைமையிலான அணியில் கூட்டணி பேச்சுவார்த்தை சுமுகமாக நடந்து கொண்டிருக்கிறது. அது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. தொகுதி பங்கீடு உள்பட அனைத்தும் சுமுக மாக முடிவடையும் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது என்றார் யெச்சூரி.
ஒரே நாடு ஒரே தேர்தல் ஜனநாயக விரோதம்
பின்னர் செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு யெச்சூரி பதில் அளித் தார். 2029 ஆம் ஆண்டு ஒரே நாடு ஒரே தேர்தல் முறையை அறிமுகப்படுத்த ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வந்துள்ளது குறித்து செய்தியாளர் ஒருவர் கேட்டதற்கு பதில் அளித்த யெச்சூரி, எங்களது கட்சி ஏற்கனவே ஒரே நாடு ஒரே தேர்தல் முறையை நிராகரித்து விட்டது என்றார். இது அரசியல் சாச னத்திற்கு விரோதமானது. ஜனநாய கத்திற்கு விரோதமானது என்று நாங்கள் தெளிவாகச் சொல்லி விட்டோம். சட்டப்பேரவை அல்லது மக்களவையில் ஒரு அரசு பெரும்பா ன்மையை இழந்துவிட்டால் மீண்டும் மக்களின் நம்பிக்கையைப் பெற தேர்தலை சந்தித்தாக வேண்டும். 1952,1957,1962 ஆகிய ஆண்டு களில் மக்களவை மற்றும் சட்டப்பேர வைத் தேர்தல்கள் ஒரே நேரத்தில் தான் நடந்தன. இதில் எங்கே இடையூறு ஏற்பட்டது என்றால் மக்களால் ஜனநா யக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகளை ஒன்றிய அரசு கலைத்தபோது சட்டப் பேரவைக்கு தனியாக தேர்தலை நடத்த வேண்டிய தேவை எழுந்தது. அதனால் அப்போ தைய ஒன்றிய அரசால் பாதிக்கப்பட்ட முதல் கட்சி நாங்கள் தான். கேரளா வில் முதலாவது கம்யூனிஸ்ட் கட்சி அரசு கலைக்கப்பட்டது. 356ஆவது சட்டப்பிரிவை அரசியல் சாசனத்தில் இருந்து நீக்க மோடி அரசு நட வடிக்கை எடுக்காதவரை ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது ஏமாற்று வேலை யாகவே இருக்கும். ஒருவேளை ஒரு அரசு பெரும்பான்மையை இழந்து விட்டால் அந்த அரசு நீடித்துக் கொண்டே இருக்குமா? மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசை டிஸ்மிஸ் செய்துவிட்டால் ஒரே நாடு ஒரே தேர்தல் முறையை எப்படி உறுதிப் படுத்துவீர்கள்? இப்படி ஏராளமான கேள்விகளுக்கு அரசிடம் உரிய பதில் இல்லை என்றார் யெச்சூரி.
அதுதான் பாஜக
இமாச்சலப் பிரதேசத்தில் காங்கிரஸ் அரசு பெரும்பான்மை பெற்றுள்ள போதிலும் அக்கட்சியைச் சேர்ந்த ஒரு சில சட்டமன்ற உறுப்பினர்களை விலை க்கு வாங்கி மாநிலங்களவைத் தேர்த லில் பாஜக வெற்றி பெற்றுள்ளது குறித்த கேள்விக்கு பதில் அளித்த யெச்சூரி, அது தான் பாஜக என்றார். இமாச்சலப் பிரதேசத்தில் மட்டுமல்ல, நாடு முழுவதும் இத்தகைய இழி வான குதிரை பேர அரசியலை பாஜக நடத்தி வருகிறது. பணத்தைக் கொண்டு எம்எல்ஏக்களை விலைக்கு வாங்குகிறது. இல்லையென்றால் அம லாக்கத்துறை இயக்குநர் அலுவல கம், சிபிஐ, வருமான வரித்துறை மூல மாக மிரட்டி மக்களின் தீர்ப்புக்கு நேர் விரோதமாக எதிர்க்கட்சி எம்எல்ஏக் கள், எம்பிக்களை விலைக்கு வாங்கிக் கொண்டிருக்கிறது. கடந்த காலத்தில் பாஜக இதுபோன்று பல முறை நடந்து கொண்டது. அதனால் தான் எந்த கட்சி தேர்தலில் வெற்றிபெற்றாலும் பாஜக தான் ஆட்சி அமைக்கும் என்று அக்கட்சி யினர் கூறுகிறார்கள் என்றும் யெச்சூரி சுட்டிக்காட்டினார்.
பாஜக ஆதாயமடையக்கூடாது என்பதே பொது இலக்கு
கேரளாவில் காங்கிரஸ் கட்சியை சிபிஎம் கடுமையாக எதிர்க்கிறது. தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியும் அங்கம் வகிக்கும் கூட்டணியில் இடம் பெற்றுள்ளது. வரும் தேர்தலில் பாஜ கவை வீழ்த்தவேண்டும் என்பது தான் பொதுவான நோக்கம். சில மாநிலங்களில் ஒன்றுபட்டு பாஜகவை வீழ்த்த வேண்டியுள்ளது. சில மாநி லங்களில் எல்லோரும் இணைந்தால் பாஜக ஆதாயமடையும் நிலை உள்ளது. எனவே சில மாநிலங்களில் தனித்து பாஜகவை எதிர்த்து களம் காண வேண்டியுள்ளது. அந்தந்த மாநி லங்களில் எழும் பிரத்யேக நிலைமை களின் அடிப்படையில் இதுகுறித்து முடிவை எடுக்க வேண்டியுள்ளது. தமிழகத்தில் திமுக தலைமை யிலான அணியை நாங்கள் ஆதரிக்கி றோம். அகில இந்திய அளவில் இந்தியா அணியில் நாங்கள் இடம் பெற்றுள்ளோம். உத்தரப்பிரதேசத்தில் சமாஜ்வாதி கட்சியும், பீகாரில் ராஷ்டிரிய ஜனதாதள கட்சியும் இந்தியா கூட்டணிக்கு தலைமை வகிக் கின்றன. மகாராஷ்டிராவில் தேசிய வாத காங்கிரஸ், உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா கட்சி ஆகியவை தலைமை தாங்குகின்றன. அந்தந்த மாநிலங்களில் பாஜகவை வலுவாக எதிர்க்கக்கூடிய கட்சிகள் கூட்டணிக்கு தலைமை வகிக் கின்றன. எனவே இதனால் இந்தியா கூட்டணிக்குள் எந்த வித பிரச்சனை யும் இல்லை என்றும் சீத்தாராம் யெச்சூரி கூறினார். செய்தியாளர்கள் சந்திப்பின் போது கட்சியின் மாநிலக்குழு உறுப்பி னர் ஏ.ஆறுமுக நயினார், மாநில கட்டுப்பாட்டுக்குழு உறுப்பினர் இ.சங்கர், மாவட்டச் செயலாளர் பாரதி அண்ணா ஆகியோர் உடனிருந்தனர்.