சென்னை, பிப். 2 - சென்னை மாநகராட்சி தேர்தலில் 5 இடங்களில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிடுகிறது. மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளிடையே வார்டு பங்கீடு பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்தப் பேச்சுவார்த்தையில் மார்க்சிஸ்ட் கட்சிக்கு 5 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதற்கான ஒப்பந்தமும் அடுத்தடுத்து கையெழுத்தானது. அதன்படி, வடசென்னை மாவட்டத்தில் 4, 41, தென்சென்னை மாவட்டத்தில் 123, 148, மத்திய சென்னையில் 98 ஆகிய 5 வார்டுகளில் சிபிஎம் வேட்பாளர்கள் களம் இறங்குகின்றனர். இந்த பேச்சுவார்த்தைகளில் திமுக மாவட்டச் செயலாளர்கள் பி.கே.சேகர்பாபு, மா.சுப்பிரமணியம், தா.வேலு, எஸ்.சுதர்சனம், தா.இளைய அருணா ஆகி யோரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மாவட்டச் செயலாளர்கள் எல்.சுந்தர்ராஜன் (வட சென்னை), ஆர்.வேல்முருகன் (தென்சென்னை), ஜி. செல்வா (மத்தியசென்னை), மாநிலக்குழு உறுப்பி னர்கள் க.பீம்ராவ், ஏ.பாக்கியம் உள்ளிட்டோர் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு ஒப்பந்தத்தை இறுதிசெய்தனர். இதன்படி 4ஆவது வட்டத்தில் வடசென்னை மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ஆர்.ஜெயராமன், 41ஆவது வட்டத்தில் ஆர்.கே.நகர் பகுதிக்குழு உறுப்பி னர் பா.விமலா, 123ஆவது வட்டத்தில் மயிலாப்பூர் பகு திக்குழு உறுப்பினர் எம்.சரஸ்வதியும், 148ஆவது வட்ட த்தில் தென்சென்னை மாவட்டச் செயற்குழு உறுப்பி னர் எஸ்.வெள்ளைச்சாமியும் போட்டியிடுகின்றனர்.
ஆவடி
ஆவடி மாநகராட்சியில் நடைபெற்ற பேச்சு வார்த்தையில் அமைச்சர் சமு.நாசர், சிபிஎம் மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் எம்.ராமகிருஷ்ணன், மா. பூபாலன் உள்ளிட்டோர் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் 10ஆவது வார்டு மார்க்சிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப் பட்டது. இந்த வார்டில் ஆவடி தொகுதி செயலாளர் அ.ஜான் போட்டியிடுகிறார்.
தாம்பரம்
தாம்பரம் மாநகராட்சியில் நடைபெற்ற பேச்சு வார்த்தையில் அமைச்சர் தா.மோ. அன்பரசன், சிபிஎம் தென்சென்னை மாவட்டச் செயலாளர் ஆர்.வேல்முருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதில் மார்க்சிஸ்ட் கட்சிக்கு 28, 61 ஆகிய இரு வார்டுகள் ஒதுக்கப்பட்டது. 28ஆவது வார்டில் கட்சியின் பல்லாவரம் தொகுதிக்குழு உறுப்பினர் ஜி.விஜயலட்சுமியும், 61ஆவது வார்டில் தேவநேசன் நகர் கிளை உறுப்பினர் விஜயா ராதாகிருஷ்ணனும் போட்டியிடுகின்றனர்.