tamilnadu

பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் மறைவு: சிபிஎம் இரங்கல்

பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் மறைவு: சிபிஎம் இரங்கல்

சென்னை, ஜூலை 5 - பெருங்கவிக்கோ வா.மு. சேதுராமன் மறை வுக்கு மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி இரங்கல் தெரி வித்துள்ளது. கட்சியின் மாநிலச் செய லாளர் பெ. சண்முகம் இது தொடர்பாக விடுத்துள்ள இரங்கல் அறிக்கையில் குறிப்பிட்டிருப்பதாவது: மூத்த தமிழறிஞர், பெருங்கவிக்கோ வா.மு. சேதுராமன் மறைவுக்கு மார்க்  சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு  சார்பில் தனது ஆழ்ந்த இரங்  கலை தெரிவித்துக் கொள்கி றோம். கவிதைகள், காவியங் கள், கட்டுரைகள் என தன்  வாழ்நாள் முழுவதும் எழு திக் குவித்தவர். ஒரு லட்சத்  திற்கும் மேற்பட்ட கவிதை களை பதிப்பித்தவர். பன் னாட்டு தமிழுறவு மன்றம் என்ற அமைப்பை நிறுவி உலகத் தமிழர்களின் உற வுப் பாலமாக திகழ்ந்தவர்.  தமிழ் மொழி வளர்ச்சிக்கா கவே தன்னுடைய வாழ்வை  அர்ப்பணித்தவர் பெருங் கவிக்கோ வா.மு.சேதுராமன். அவரை பிரிந்து வாடும்  அவரது குடும்பத்தின ருக்கும், உறவினர்களுக் கும், தமிழறிஞர்களுக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஆறுத லைத் தெரிவித்துக் கொள்கி றோம். இவ்வாறு அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.