சிதம்பரம், பிப்.22- சிதம்பரம் நகராட்சியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் 5 வது வார்டில் போட்டியிட்ட தஸ்லிமா 714 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார். இவர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாநிலக்குழு உறுப்பினர் மூசா மகள் ஆவார். இவரை எதிர்த்துப் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் மகேஸ்வரி 573 வாக்குகள் பெற்றார். நாம் தமிழர் கட்சி ஷகிலாவுக்கு 8 , பாஜகவின் ஹெலன் ஸ்டெல்லா 12 வாக்குகளும் கிடைத்தன. அதே போல் 33- வது வார்டில் சிபிஎம் வேட்பாளர் முத்துக்குமரன் 557 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இவரை எதிர்த்துப் போட்டியிட்டபோட்டியிட்ட அதிமுக வேட்பா ளர் சேட்டு 48 வாக்குகள் மட்டுமே கிடைத்தது. சுயேட்சை வேட்பாளர் செல்வராசு 184 வாக்குகளும், பாட்டாளி மக்கள் கட்சி வேட்பாளர் செந்தில் 11 வாக்குகள் மட்டுமே கிடைத்தது. இதேபோல் பரங்கிப்பேட்டை பேரூராட்சியில் 14-வது வார்டில் சிபிஎம் சார்பில் போட்டியிட்ட ராஜேஸ்வரி 289 வாக்கு கள் பெற்று வெற்றிபெற்றுள்ளார். இவரை எதிர்த்துப் போட்டி யிட்ட பாமக வேட்பாளர் 243 வாக்குகள், அதிமுக வேட்பாளர் 239, சுயேட்சை வேட்பாளர் 118, பாஜக வேட்பாளர் 108 வாக்கு களும் பெற்றுள்ளனர். பேரூராட்சியில் உள்ள 18 வார்டுகளில் திமுக தலை மையிலான கூட்டணி 13 இடங்களில் வெற்றிபெற்று தனிபெரும் பான்மை பெற்று பேரூராட்சியைக் கைபற்றியுள்ளது.