tamilnadu

img

சிபிஎம் பிரச்சார இயக்கம்: மாவட்டங்களில் வரவேற்பு

சிபிஎம் பிரச்சார இயக்கம்: மாவட்டங்களில் வரவேற்பு

திருச்சிராப்பள்ளி, ஜுன் 12-  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில், புதன்கிழமை துவங்கி, ஜுன் 20 ஆம் தேதி வரை மக்கள் சந்திப்பு பிரச்சார இயக்கம் நடைபெறுகிறது. இதன் ஒரு பகுதியாக மலைக்கோட்டை பகுதிக்குழு சார்பில், புதனன்று நடைபெற்ற பிரச்சார இயக்கத்திற்கு மலைக்கோட்டை பகுதிச் செயலாளர் ராமர் தலைமை வகித்தார்.  மாநில அரசுகளுக்கு நியாயமாக ஒதுக்கீடு செய்ய வேண்டிய கல்வி, இயற்கை பேரிடர் உள்ளிட்ட தேவைகளுக்கு நிதி ஒதுக்குவதில் ஒன்றிய பாஜக அரசு பாரபட்சமான போக்கை கடைபிடிக்கிறது. எனவே, தமிழ்நாட்டிற்கு கூடுதல் நிதி வழங்க வேண்டும். நூறு நாள் வேலை திட்டத்தை 200 நாட்களாகவும், தினக்கூலியை ரூ.600 ஆகவும் உயர்த்த வேண்டும் என ஒன்றிய பாஜக அரசை வலியுறுத்தியும், மின் கட்டணம், சொத்துவரி, குப்பை வரி உயர்வு ஆகியவற்றை திரும்பப்பெற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை ஒன்றிய - மாநில அரசுகள் நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி இந்த பிரச்சார இயக்கம் நடைபெற்றது.  இதில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ரெங்கராஜன், பகுதிக் குழு உறுப்பினர்கள் மணிகண்டன், ரமேஷ், இளையராஜா. செழியன், செந்தில்குமார், கனகராஜ். மணிகண்டன் உட்பட பலர் கலந்து கொண்டு, கீரைக்கடைபஜார், வடக்கு தாராநல்லூர், தெற்கு தாராநல்லூர், அலங்கநாதபுரம், கல்மந்தை அடுக்குமாடி குடியிருப்பு, உப்பிலியதெரு உள்ளிட்ட பகுதிகளில் தாரை, தப்பட்டையுடன் பிரச்சாரம் செய்து, பொதுமக்களிடம் துண்டு பிரசுரம் விநியோகம் செய்தனர்.  பாபநாசம்  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நடத்தும் நாடு தழுவிய மக்கள் சந்திப்பு இயக்கம்‍ தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுகா, அம்மாபேட்டை ஒன்றியத்தில் நடைபெற்று வருகிறது.  இந்த இயக்கம் அம்மாபேட்டை ஒன்றியம், இராராமுத்திரக் கோட்டையில் துவங்கி, நடைபெற்று வருகிறது. ஒன்றியச் செயலாளர் வி. ரவி தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் தோழர் ஆர். மனோகரன் பிரச்சார இயக்கத்தின் கோரிக்கை பற்றி விளக்கினார். மாவட்டக் குழு உறுப்பினர் நம்பிராஜன், ஒன்றியக் குழு உறுப்பினர்கள் கே. முனியாண்டி, சரவணன், ராஜேந்திரன், வெற்றிச் செல்வி, உட்பட கிளைச் செயலாளர்கள் பங்கேற்றனர்.  நாகப்பட்டினம்  நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் பேரூராட்சியில், மக்கள் சந்திப்பு இயக்கம் நடைபெற்றது. கீழ்வேளூர் வடக்கு ஒன்றிய செயலாளர் என்.எம். அபுபக்கர் தலைமையில் வீடுவீடாகச் சென்று, துண்டு பிரசுரம் விநியோகம் செய்தனர். பின்னர், சிபிஐஎம் நாகப்பட்டினம் மாவட்டச் செயலாளர் வி. மாரிமுத்து தெருமுனைப் பிரச்சார உரை நிகழ்த்தினார். மாவட்டக்குழு உறுப்பினர்கள் எஸ். சுபா தேவி, எஸ். பாண்டியன், எஸ். துரைராஜ் உள்ளிட்டோர் பங்கு பெற்றனர்.  மயிலாடுதுறை  மயிலாடுதுறை மாவட்டத்தில் மக்களின் வாழ்வாதார கோரிக்கைகளை நிறைவேற்ற ஒன்றிய, மாநில அரசுகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் பிரச்சார இயக்கம் துவங்கி நடை்பெற்று வருகிறது.  தரங்கம்பாடி ஒன்றியம், திருவிளையாட்டம் கடைவீதியில் கட்சியின் ஒன்றியச் செயலாளர் ஏ.ரவிச்சந்திரன் தலைமையில் வியாழனன்று புறப்பட்ட பிரச்சார இயக்கத்தை மாவட்டச் செயலாளர் பிசீனிவாசன் துவக்கி வைத்து உரையாற்றினார். மாவட்டக்குழு உறுப்பினர்கள் குணசுந்தரி, அம்மையப்பன், ஐயப்பன், செல்வபாக்யவதி மற்றும் ஒன்றியக்குழு உறுப்பினர்கள், கிளைச் செயலாளர்கள், கட்சி உறுப்பினர்கள் கலந்துக்கொண்டனர். செம்பனார்கோவில்  மேல முக்கூட்டில், செம்பை ஒன்றியச் செயலாளர் கே.பி.மார்க்ஸ் தலைமையில் புறப்பட்ட பிரச்சார இயக்கத்தை, மாவட்டச் செயலாளர் பி.சீனிவாசன் துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார். மாவட்டக்குழு உறுப்பினர் கண்ணகி மற்றும் ஒன்றியக்குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.   கரூர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ராயனூர் கிளை சார்பில், ராயனூர் கடைவீதியில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு பிரச்சார இயக்கத்திற்கு, கரூர் மாநாகரக் குழு உறுப்பினர் எம். சுப்பிரமணியன் தலைமை வகித்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் எஸ்.பாலா  சிறப்புரையாற்றினார்.  மாவட்டச் செயலாளர் மா.ஜோதிபாசு, மாவட்டக் குழு உறுப்பினர்கள் ஆர்.ஹோச்சுமின், எஸ்.பி. ஜீவானந்தம், கிளை நிர்வாகிகள் ராமகிருஷ்ணன், கணேசன், பிரசாத், கேசவன், ஆறுமுகம் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். தாந்தோணி கடை வீதியில் நடைபெற்ற பிரச்சாரத்திற்கு கிளை உறுப்பினர் ரஞ்சிதா தலைமை வகித்தார்.