tamilnadu

img

வரைவு அரசியல் தீர்மானம் தாக்கல்

கண்ணூர், ஏப்.7- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் 23ஆவது அகில இந்திய மாநாடு புதன் அன்று  கண்ணூரில் துவங்கி யது. புதன் மாலை வரைவு அரசியல் தீர்மானத்தை, மாநாட்டுப் பிரதிநிதி களிடையே கட்சியின் பொதுச் செய லாளர் சீத்தாராம் யெச்சூரி தாக்கல் செய்து உரையாற்றினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடைப்பிடித்துவரும் உட்கட்சி ஜன நாயக நெறிமுறைகளின்படி, மாநாட்டில் நிறைவேற்றப்படவிருக்கும் வரைவு அர சியல் தீர்மானம் இரண்டு மாதங் களுக்கு முன்பே கட்சித் தோழர்களுக்கு ஆய்வுக்காக வெளியிடப்பட்டது. கட்சி யின் அனைத்து உறுப்பினர்களுமே தங்கள் திருத்தங்களை மத்தியக் குழுவிற்கு நேரடியாக அனுப்பிடலாம். அதன்படி அதற்காக நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்குள், மத்தியக் குழு 4001 திருத்தங்களைப் பெற்றிருந்தது. அனை த்தும் பரிசீலனை செய்யப்பட்டு, மாநா ட்டுக்கு முந்தைய திருத்தங்கள் மீது ஓர் அறிக்கை பொதுச்செயலாளரால் தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. அது வும் மத்தியக்குழுவால் ஏற்கப்பட்டு, மாநாட்டுப் பிரதிநிதிகளின் முன் சமர்ப்பிக்கப்படுகிறது.

வரைவு அரசியல் தீர்மானத்தின் மீதான விவாதம் வியாழன் காலை  தொடங்கியது. இதுவரை கீழ்க்கண்ட  தோழர்கள் விவாதத்தில் பங்கேற்றுள் ளார்கள்: பீ.ராஜீவ் (கேரளம்), ஸ்ரீஜன் பட்டாச் சார்யா (மேற்கு வங்கம்), ஆர். பத்ரி  (தமிழ்நாடு), உதய் நர்கார் (மகாராஷ் ட்ரா), ஹரிபதா தாஸ் (திரிபுரா), லலன்  சௌத்ரி (பீகார்), ராம் கோபால் (ஆந்திரப்பிரதேசம்), பிரகாஷ் விப்லவ்  (ஜார்க்கண்ட்), ஜனார்த்தன் பதி(ஒடிசா),  இஸ்பக்கு ரகுமான் (அஸ்ஸாம்), துளி சந்த் (ராஜஸ்தான்), பாலகிருஷ்ண ஷெட்டி (கர்நாடகம்).

பெட்ரோலியப் பொருட்கள் விலை உயர்வுக்கு எதிராகத் தீர்மானம்

வியாழன் காலை அமர்வு  தொடங்கியதும், ஒன்றிய பாஜக அரசாங்கம் பெட்ரோலியப் பொருட் களின் விலைகளை நாள்தோறும் உயர்த்திக்கொண்டிருப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து தீர்மானம் நிறை வேற்றப்பட்டது. எரிபொருள் விலை களை உயர்த்துவது பணவீக்கத்தை மேலும் அதிகரித்து, சாமானிய மக்க ளுக்கு சொல்லொண்ணா துன்ப துயரங்களை ஏற்படுத்திக்கொண்டி ருக்கின்றது. எனவே, பாஜக ஆட்சிக் காலத்தில் விதிக்கப்பட்ட கூடுதல் வரி களை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்று மாநாடு கோரியது. மேலும், பணக்காரர்கள் மீதான வரி களை அதிகரித்திட வேண்டும் என்றும், கட்டுப்பாடுகளைக் கொண்டு வர வேண்டும் என்றும், பெட்ரோ லியப் பொருட்களின் மீதான சில்ல ரை விலைகளைக் குறைக்க வேண் டும் என்றும் பெட்ரோலியத் துறை யில் இயங்கும் பொதுத்துறை நிறு வனங்களைத் தனியார்மயப்படுத்தும் நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.         (ந.நி.)