tamilnadu

img

சிபிஎம் - பொதுமக்கள் போராட்டம் வெற்றி! பூவாணம் கிராமத்தில் கோரிக்கைகளை நிறைவேற்றித் தர அலுவலர்கள் உறுதி

சிபிஎம் - பொதுமக்கள் போராட்டம் வெற்றி! பூவாணம் கிராமத்தில் கோரிக்கைகளை  நிறைவேற்றித் தர அலுவலர்கள் உறுதி

தஞ்சாவூர், செப். 21-   நூறுநாள் வேலைத் திட்டத்தில் தொடர்ந்து வேலை வழங்க வேண்டும். தினக்கூலியை ரூ.600 ஆகவும், வேலையை 200 நாளாகவும் அதிகரித்து வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பூவாணம் கிளை சார்பில், சனிக்கிழமை (செப்.20) காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. ஒன்றியக்குழு உறுப்பினர் சி. நவநேசன், தலைமை வகித்தார். சிபிஎம் மாவட்டச் செயலாளர் சின்னை.பாண்டியன், மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ஆர்.மனோகரன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க ஒன்றியச் செயலாளர் வி.ஆர்.கே. செந்தில்குமார், மாவட்டக்குழு உறுப்பினர் ஆர்.எஸ். வேலுச்சாமி, தமிழ்நாடு விவசாயிகள் சங்க ஒன்றியத் தலைவர் வீ.கருப்பையா ஆகியோர் உரையாற்றினர். கிளைச் செயலாளர் எஸ். எழிலரசன், விவசாயத் தொழிலாளர்கள் சங்கம் எம்.கஜேந்திரன், எஸ்.பாலகிருஷ்ணன், மாற்றுத் திறனாளிகள் சங்கம் ராஜேஷ் கண்ணா மற்றும் கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர். இதையடுத்து, அங்கு வந்த பட்டுக்கோட்டை வட்டாட்சியர் தர்மேந்திரா, சேதுபாவாசத்திரம் வட்டார வளர்ச்சி அலுவலர் மனோகரன் மற்றும் அலுவலர்கள், போராட்டம் நடத்தியவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.  இதில், கோரிக்கைகளுக்கு விரைவில் உரிய தீர்வு காணப்படும் என உறுதியளித்ததைத் தொடர்ந்து, காத்திருப்பு போராட்டம் தற்காலிகமாக விலக்கிக் கொள்ளப்பட்டது.