கோவிட் 19 தொற்றிற்கு எதிரான தடுப்பூசி களில் கியூபாவில் தயாரிக்கப்படும் அப்தாலாவைப் பயன்படுத்துவதற்கு மெக்சிகோவின் சுகாதார ஆணையம் ஒப்புதல் தெரிவித்துள்ளது. இது குறித்து அந்த ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “தேசிய சுகாதார ஒழுங்குபடுத்தும் உத்தி யின் ஒரு பகுதியாகத்தான் இந்த அங்கீகாரம் தரப் பட்டிருக்கிறது. மருந்தின் பாதுகாப்பு, தரம் மற்றும் வீரியம் ஆகியவை நிரூபிக்கப்பட்டால்தான் இந்த அங்கீகாரம் வழங்கப்படுகிறது” என்று கூறியுள்ளது.
கடந்த 135 நாட்களாக உண்ணாவிரதம் இருந்து வரும் பாலஸ்தீனக் கைதியான ஹிசாம் அபு ஹவாஸ் தனது பேச்சுத்திறனையும், பார்வையையும் இழந்துள்ளார். அவரது உடல்நிலை தொடர்ந்து மோசமாகி வருகிறது. தங்களுக்கு நியாய மான விசாரணை தேவை என்று இஸ்ரேலில் சிறைக ளில் இருக்கும் பாலஸ்தீனக் கைதிகளில் 2021ல் மட்டும் 60க்கும் மேற்பட்டவர்கள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தியிருக்கிறார்கள்.
சீனாவின் ஒருபகுதிதான் தைவான் என்பதில் உறுதியாக இருப்பதாகவும், அந்த நிலைக்கு மாறாக தைவான் ஏதாவது முடிவை எடுத்தால் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று சீனா கூறி யுள்ளது. அமைதியான முறையில் ஒருங்கிணைவ தற்கான வாய்ப்புகளை முயற்சிப்பதற்கு எப்போதுமே சீனா தயாராகவே உள்ளது என்று தைவான் விவகா ரத்துறை அலுவலகத்தின் செய்தித் தொடர்பாளரான மா ஜியாவோகுவாங் தெரிவித்திருக்கிறார்.