பெங்களூரு.பிப்.4- சனாதனம் குறித்து கருத்து தெரி வித்ததற்கு எதிராக தொடுக்கப்பட்ட வழக்கில் தமிழ்நாடு அமைச்சர் உதய நிதி ஸ்டாலின் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் சம்மன் அனுப்ப உத்தரவிட்டுள்ளது. சென்னையில் நடைபெற்ற தமுஎகச மாநாட்டில் இடம் பெற்ற அமைச்சர் உதயநிதி பேச்சுக்கு பாஜக மற்றும்சங்பரிவார அமைப்பு கள் எதிர்ப்பு தெரிவித்ததோடு நாட்டின் பல்வேறு இடங்களில் அவ ருக்கு எதிராக திட்டமிட்டு வழக்கு தொடுத்தனர். இந்நிலையில் பெங்க ளூருவை சேர்ந்த பஜ்ரங் தள நிர்வாகி பரமேஷா, பெங்களூருவில் உள்ள எம்.பி., எம்எல்ஏக்களுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், ‘‘உதய நிதி ஸ்டாலின் பேசிய கருத்தால் இந்துக்களின் மனம் புண்பட்டுள்ளது. இரு தரப்பினரிடையே வன்முறை யை தூண்டும் வகையிலும், மத உணர்வை அவமதிக்கும் வகையி லும் அவரது பேச்சு அமைந்திருக்கி றது’’ என குறிப்பிட்டிருந்தார். இந்த மனு நீதிபதி பிரீத்.ஜே முன்னிலையில் சனிக்கிழமை விசார ணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, ‘சனாதனம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய உதயநிதி ஸ்டா லின் வருகிற மார்ச் 4-ம் தேதி நேரில் ஆஜராக வேண்டும். இதேபோல அந்த மாநாட்டை ஏற்பாடு செய்த மதுரை எம்.பி. சு.வெங்கடேசன், பத்திரிகையாளர் மதுக்கூர் ராம லிங்கம், எழுத்தாளர் ஆதவன் தீட்சண்யா ஆகியோரும் அதே நாளில் நேரில் ஆஜராக வேண்டும்’ எனக்கூறி சம்மன் அனுப்ப உத்தர விட்டார்.