திருவள்ளூர்,மார்ச் 4- திருவள்ளூர் மாவட்டம் ஆரணி பேரூராட்சிமன்ற தேர்தலில் பேரூராட்சிமன்றத் தலைவராக ராஜேஸ்வரி என்பவர் தேர்வு செய்யப்பட்டார். துணைத் தலைவருக்கான தேர்தலில் திமுக சார்பில் கண்ணதாசன் என்பவர் போட்டி யிடுகின்றார். இந்த நிலையில் 3 ஆவது வார்டு சுயேட்சை வேட்பாளர் பிரபாவதியை கடத்திச் சென்றுவிட்டதாக கூறப்படுகின்றது. இதனை அறிந்த அவரது கணவர் தனது மனைவியை மீட்டுத் தரக் கோரி ஆரணி பேரூராட்சி அலு வலகத்தின் முன்பு தனது குழந்தையுடன் போராட்டத்தில் ஈடுபட்டார். பாதுகாப்புபணியில் இருந்த காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்ட அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.