பருத்தி மறைமுக ஏலம்
பாபநாசம், ஜூலை 31 - தஞ்சாவூர் விற்பனைக் குழுவின்கீழ் இயங்கி வரும் கும்பகோணம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் பருத்தி மறைமுக ஏலம் நடந்தது. விற்பனைக் கூட கண்காணிப்பாளர் பிரியமாலினி தலைமை வகித்தார். மின்னணு தேசிய வேளாண் சந்தை சார்பில் நடைபெற்ற பருத்தி ஏலத்தில், கும்பகோணம், அதன் சுற்று வட்டாரத்தைச் சார்ந்த 683 விவசாயிகள் 150 மெட்ரிக் டன் அளவு பருத்தியை எடுத்து வந்தனர். மகாராஷ்டிரா, ஆந்திரா மாநிலத்தைச் சேர்ந்த வணிகர்கள், கும்பகோணம், செம்பனார்கோவில், பண்ருட்டி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த வணிகர்கள் ஏலத்தில் பங்கேற்று அதிகபட்சம் ரூ.7669, குறைந்தபட்சம் ரூ. 7269, சராசரி ரூ.7475 என விலை நிர்ணயித்தனர். பருத்தியின் தோராய மதிப்பு ரூ.1.05 கோடி.