4,000-ஐ நெருங்கிய கொரோனா பாதிப்பு
நாட்டின் பல்வேறு மாநிலங்களில் மீண்டும் கொரோனா தொற்று பரவத் தொடங்கியுள்ளது. கேரளம், மகாராஷ்டிரா உள்ளிட்ட ஒரு சில மாநிலங்களில் கொரோனா பரவல் மிக வேகமாக உள்ளது. இந்நிலையில், கடந்த மணிநேரத் தில் புதிதாக கொரோனா பாதித்தவர்க ளைச் சேர்த்து நாடு முழுவதும் 3,961 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதிகபட்சமாக கேர ளத்தில் 1,435 பேருக்கு பாதிப்பு உறுதி யாகியுள்ளது. மகாராஷ்டிராவில் 506 பேருக்கும், தில்லியில் 483 பேருக்கும், குஜராத்தில் 338 பேருக்கும், மேற்கு வங்கத்தில் 331 பேருக்கும், கர்நாடகா வில் 253 பேருக்கும், தமிழ்நாட்டில் 189 பேருக்கும், உத்தரப்பிரதேசத்தில் 157 பேருக்கும், ராஜஸ்தானில் 69 பேருக் கும் கொரோனா பாதிப்பு ஏற் பட்டுள்ளது.
கர்நாடக உயர்நீதிமன்றத்தில் கமல்ஹாசன் மனு தாக்கல்
கடந்த மாதம் முன்னணி திரைக் கலைஞரும்,மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் சமீபத்தில்,”தமிழ் மொழி யில் இருந்து தான் கன்னடம் உருவா னது” எனக் கூறினார். உடனே கன்னட அமைப்புகள் மற்றும் கர்நாடக திரைப் பட வர்த்தக சபை (KFCC),”கமல் ஹாசன் கன்னட மொழியை அவமதித்து விட்டார். இதுதொடார்பாக பொது மன்னி ப்பு கேட்காவிட்டால், கர்நாடகாவில் கமல்ஹாசன் திரைப்படத்தைத் திரை யிட அனுமதிக்க மாட்டோம்” என கூட்டாக அறிக்கை வெளியிட்டன. இந்நிலையில், மணிரத்னம் இயக் கத்தில் கமல்ஹாசன், சிலம்பரசன், திரிஷா நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் ஜூன் 5ஆம் தேதி நாடு முழுவதும் ரிலீஸ் ஆகுகிறது. இத்தகைய சூழலில் கமல்ஹாசன்,”தக் லைஃப் திரைப்பட வெளியீட்டை உறுதி செய்யவும், திரையரங்குகளில் போதுமான பாதுகாப்பை அளிக்கவும் மாநில அரசுக்கு உத்தரவிட வேண் டும்” என வலியுறுத்தி கர்நாடக உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
ரூ.6,181 கோடி மதிப்பிலான ரூ.2,000 நோட்டுகள் புழக்கம்
2023ஆம் ஆண்டு மே 19 அன்று ரூ.2,000 நோட்டு களை புழக்கத்தில் இருந்து திரும்பப் பெறுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்தது. இந்த அறிவிப்பு வெளியான போது 3.56 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான ரூ.2,000 நோட்டுகள் புழக்கத்தில் இருந்தன. 2000 ரூபாய் நோட்டுகளை வங்கிக் கிளைகளில் டெபாசிட் செய்ய அல்லது மாற்றிக் கொள்ளும் கடைசி தேதியாக அக்டோபர் 7, 2023 வரை இருந்தன. இந்நிலையில், ரூ.2,000 நோட்டுகள் புழக்கம் தொடர்பாக ரிசர்வ் வங்கி வெளி யிட்டுள்ள அறிக்கையில்,”ரூ.2,000 நோட்டுகள் 98.26% திரும்ப பெறப் பட்டுள்ளன. ஜூன் 2, 2025 நிலவரப்படி ரூ.6,181 கோடி மதிப்பிலான ரூ.2,000 நோட்டுகள் மட்டுமே புழக்கத்தில் உள்ளன. அவை தொடர்ந்து சட்டப்பூர்வ புழக்கத்தில் இருக்கும்” என அதில் கூறப்பட்டுள்ளது. ஆனால் தற்போது புழக்கத்தில் ரூ.6,181 கோடி மதிப்பிலான ரூ.2,000 நோ ட்டுகள் யார் பயன்பாட்டில் உள்ளது? எதற்காக இந்த சிறப்பு அனுமதி வழங்கப் பட்டது என்பது தொடர்பாக ரிசர்வ் வங்கி எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
போலிச் சாமியார் ராம்தேவுக்கு ரூ.273 கோடி அபராதம் அலகாபாத் உயர்நீதிமன்றம் உத்தரவு
பிரதமர் மோடியின் நெருங்கிய நண் பரான போலிச் சாமியார் பாபா ராம்தேவ் ஆயுர்வேத பொருட்கள் விற்பனை என்ற பெயரில் பதஞ்சலி நிறு வனத்தை நடத்தி வருகிறார். இந்நிறுவ னம் ஆன்லைனில் முறையாக ஜிஎஸ்டி பண பரிவர்த்தனை செய்யவில்லை என குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர் பாக ஜிஎஸ்டி அதிகாரிகள் நடத்திய விசாரணையில், காகிதத்தில் எழுதிய ரசீதுகளை பதஞ்சலி நிறுவனம் கையாண் டது தெரியவந்தது.இதனையடுத்து பதஞ்சலி நிறுவனத்துக்கு ஜிஎஸ்டி சட்டத்தின் கீழ் ரூ.273 கோடி அபராதம் விதிக்கப்பட்டது. இதனை எதிர்த்து பாபா ராம்தேவ் அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு திங்களன்று அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதிகள் சேகர் பி.சரப், விபின் சந்திர தீட்சித் ஆகி யோர் கொண்ட அமர்வில் விசாரணை க்கு வந்தது. ஜிஎஸ்டி மற்றும் பாபா ராம்தேவ் என இருதரப்பு வாதத்திற்கு பின்பு அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி கள்,”ஜிஎஸ்டி சட்டங்களின் கீழ் அபராதம் விதிக்கும் செயல்முறை இயல்பானது தான். சிவில் செயல்முறைகள் மூலம் சிஜிஎஸ்டி சட்டத்தின் பிரிவு 122இன் கீழ் அபராதம் விதிக்கலாம். பரிவர்த்தனை தொடர்பாக ஜிஎஸ்டி அதிகாரிக்கு அபரா தம் விதிக்கும் நடவடிக்கைகளை மேற் கொள்ள முழு அதிகாரம் உள்ளது. இதற்கெல்லாம் வழக்குத் தொடர வேண்டிய அவசியமில்லை “ எனக் கூறி பாபா ராம்தேவின் வழக்கை தள்ளுபடி செய்தனர். ஏற்கெனவே அலோபதி அவமதிப்பு வழக்கு தொடர்பாக உச்சநீதிமன்றம் மற்றும் பாலக்காடு நீதிமன்றத்தில் (கேர ளம்) குட்டு வாங்கிய நிலையில், தற்போது அலகாபாத் உயர்நீதிமன்றத்திலும் அவ மானப்பட்டுள்ளார்.
“தேசியவாத காங்கிரசின் இரு அணிகள் மீண்டும் இணைய வாய்ப்பில்லை”
மும்பை ஊழல், பாஜகவின் மிரட்டல் மற்றும் பதவி ஆசை ஆகியவற்றால் கடந்த 2023ஆம் ஆண்டு சரத் பவாரின் தேசிய வாத காங்கிரஸ் கட்சியை இரண் டாக உடைத்தார் அஜித் பவார். தற்போது தேசியவாத காங்கிரஸ் (சரத்), தேசியவாத காங்கிரஸ் (அஜித்) என இரண்டு கட்சிகளாக உள்ளன. இதில் அஜித் பவார் பிரிவு மகாராஷ்டிரா ஆளும் கூட் டணி கட்சியாக உள்ளது. அஜித் பவார் துணை முதலமைச்சராக உள்ளார். இந்நிலையில், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் இரு அணி கள் மீண்டும் இணைய வாய்ப்புள்ள தாக செய்திகள் வெளியாகி வரு கின்றன. சமீபத்தில் ஒரு விழா மேடையில் சரத் பவார் - அஜித் பவார் சந்தித்தனர். உடனே பாஜக ஆதரவு “கோடி மீடியா” ஊடகங் கள்,”பாஜக கூட்டணியில் சரத் பவார் இணைகிறார். அஜித் பவார் அணியுடன் தனது அணியை சரத் பவார் விரைவில் இணைப்பார்” என தலைப்புச் செய்திகளாக வெளி யிட்டன. இத்தகைய சூழலில் தேசிய வாத காங்கிரஸ் கட்சியின் இரு அணிகள் மீண்டும் இணைய வாய்ப்பில்லை என தேசியவாத காங்கிரஸ் (சரத்) கட்சியின் மூத்த தலைவர் அனில் தேஷ்முக் கூறி யுள்ளார். இதுதொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,”சரத் பவா ரும், அஜித் பவாரும் சமீபகாலங்க ளில் பலமுறை சந்தித்துள்ளனர். இது அரசியல் வட்டாரங்களில் நல்லிணக்க விஷயம். ஆனால் இந்த சம்பவங்களை வைத்து தேசியவாத காங்கிரஸ் கட்சியின் இரு அணிகள் மீண்டும் இணை யும் என்று வெளியாகும் ஊகங் கள் தவறானது. அணிகள் இணை ப்பு தொடர்பாக சாதாரண பேச்சு வார்த்தை கூட இதுவரை நடைபெற வில்லை. அதற்கான திட்டமும் இல்லை” என அவர் கூறினார்.