tamilnadu

img

செப்பேடுகளை சட்டநாதர் கோவிலில் பராமரிக்க வைகோ வேண்டுகோள்

சென்னை, ஏப்.20- சீர்காழியில் உள்ள சட்டநாதர் கோவிலில் கண்டெடுக்கப்பட்ட  செப்பேடுகளை அதே கோவிலில் அருங்காட்சியகம் அமைத்து பராமரிக்கவேண்டும் என்று  ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ  கேட்டுக்கொண்டுள்ளார். இதுகுறித்து அவர் வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறி யிருப்பதாவது:-  மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழியில் உள்ள சட்டநாதர் கோவிலில் கடந்த 16 ஆம் தேதி  பூமிக்கு  அடியில் இருந்து 23 செப்புத் திரு மேனிகள், 412 செப்பேடு கள் மற்றும் பூஜைப் பொருட்கள் உள்ளிட்டவை கண்டெடுக்கப்பட்டன. இந்த வரலாற்று ஆதாரமான செப்பேடு கள், சீர்காழி சட்டநாதர் கோவிலி லேயே வைத்துப் பாதுகாக்கப்பட வேண்டும். அங்கு ஓர் சிறப்பு அறை  கட்டப்பட்டு அதில் இந்த செப்பேடு கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டு பொதுமக்கள் பார்வையிட அனுமதி அளிக்கப்பட வேண்டும். குடமுழுக்கிற்குப் பின்னர் கோவி லிலேயே அருங்காட்சியகம் அமைப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருவதாக தருமையா தீனத்தின் குருமகா சந்நிதானம் ஏற்கனவே அறிவித்துள்ளார். சீர்காழி சட்டநாதர் கோவிலில் அருங்காட்சியகம் அமைத்திட, மு.க.ஸ்டாலின் தலைமையிலான நம்  தமிழ்நாடு அரசு ஆதீனத்திற்கு அனுமதி அளித்திட வேண்டும்  என்று கேட்டுக்கொள்கிறேன்.  இவ்வாறு அவர் கூறியுள்ளார்.