தேவை குறைவா? வாங்கும் சக்தி குறைந்து விட்டதா?
புதுதில்லி, மே 12 - இந்தியாவில் தொடர்ந்து மூன்றாவது ஆண் டாக சமையல் எண்ணெய் இறக்குமதி வீழ்ச்சி யடைந்துள்ளது. இந்தியாவைப் பொறுத்தவரையில், தனது உள்நாட்டுத் தேவைகளைப் பூர்த்தி செய்ய இறக்குமதியையே அதிகமாக சார்ந்திருக்க வேண்டிய சூழல் இருக்கிறது. உள்நாட்டு உற் பத்தி ஊக்குவிக்கப்பட்டாலும் அது தேவை யைப் பூர்த்தி செய்யும் அளவுக்கு இருப்ப தில்லை. இறக்குமதிச் செலவுகள் அதிகரித்தாலும், பெரும்பாலான துறைகளில் இறக்குமதியையே அதிகமாக சார்ந்திருக்க வேண்டியுள்ளது. சமையல் எண்ணெய் இறக்குமதியும் இந்தி யாவில் அதிகமாக நடைபெறுகிறது. ஆனால், கடந்த சில ஆண்டுகளாக சமையல் எண்ணெய் இறக்குமதி தொடர்ந்து குறைந்து வருகிறது. சென்ற 2020-21 ஆண்டின் சந்தைப் பருவத்தில் 13.13 மில்லியன் டன் அளவுக்கு சமையல் எண்ணெய்யை இறக்குமதி செய்திருந்தது. ஆனால், 2021-22 சந்தைப் பருவத்தில் 12.9 மில்லி யன் டன் அளவிலான சமையல் எண்ணெய்யே இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.
2021-22ஆம் ஆண்டுக்கான சந்தைப் பரு வத்தில் முதல் ஆறு மாதங்களில் மட்டும் 6.54 மில்லியன் டன் சமையல் எண்ணெய் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் சமையல் எண்ணெய் நுகர்வு கடந்த 20 ஆண்டுகளில் 3 மடங்கு அதிகரித்தது. மக்கள் தொகைப் பெருக்கம், அடிக்கடி வெளியே சாப்பிடத் தொடங்கிய பிரிவினருக்காக அதிக மான எண்ணிக்கையில் உருவான உணவகங்கள் இதற்குக் காரணம். இந்தியாவின் சமையல் எண்ணெய் இறக்குமதி 20 ஆண்டுகளுக்கு முன்பு 4 மில்லியன் டன்களாக இருந்தது, தற் போது 15 மில்லியன் டன்கள் அளவிற்கு அதி கரித்துள்ளது. எனினும் அதில் தற்போது சரிவு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. சால்வென்ட் எக்ஸ்ட்ராக்டர்ஸ் அசோசியேஷ னின் நிர்வாக இயக்குநர் பி.வி. மேத்தா, இது தொடர்பாக துபாயில் நடந்த மாநாட்டில் பேசுகை யில், “கடந்த 3 ஆண்டுகளில் இந்தியாவில் போதிய அளவில் மழைப்பொழிவு இருந்ததால் உள்நாட்டிலேயே தாவர எண்ணெய் உற்பத்திக் கான வாய்ப்புகள் அதிகரித்தது, 1.5 மில்லியன் டன் இறக்குமதியை குறைக்க உதவியது” என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், சர்வதேசச் சந்தையில் விலை அதிக மாக இருந்ததாலும், இந்தியா தனது சமை யல் எண்ணெய் இறக்குமதியைக் குறைத்துக் கொண்டு, தேவையை ஈடுகட்ட உள்நாட்டு தாவர எண்ணெய் உற்பத்தியிலும் விநியோகத்திலும் கூடுதல் கவனம் செலுத்தியதும் இறக்குமதி சரி வுக்கு காரணம் என்று கூறப்படுகிறது. ஆனால், இறக்குமதி எண்ணெய்யின் அளவு குறைந்தாலும், இந்தியாவில் சமையல் எண்ணெய் விலை குறையவில்லை. இது உள் நாட்டு எண்ணெய் உற்பத்தி அதிகரித்ததால், இறக்குமதி குறைந்ததா? அல்லது இந்தி யர்களின் வாங்கும் சக்தி குறைந்ததன் காரண மாக, அது தேவையிலும் இறக்குமதியிலும் எதி ரொலித்ததா? என்ற கேள்விகளை எழுப்பி யுள்ளது. இந்த ஆண்டில் விலைவாசி உயர்வு எதிர் பார்ப்பை விட அதிகமாகத்தான் இருக்கும் என்று ரிசர்வ் வங்கியே கூறியிருப்பது இங்கு குறிப்பி டத்தக்கது.