நாடாளுமன்ற சிறப்பு அமர்வைக் கூட்டுக! பிரதமர் மோடிக்கு 16 கட்சிகள் கடிதம்
‘ஆபரேசன் சிந்தூர்’ பற்றி மக்களுக்கு விளக்குவது அவசியம்!
புதுதில்லி, ஜூன் 3 - ‘ஆபரேசன் சிந்தூர்’ தாக்குதல் தொடர்பான உண்மைகளை மக்க ளுக்கு தெரிவிக்கும் வகையில், நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தைக் கூட்டுமாறு பிரதமர் நரேந்திர மோடிக்கு, 16 எதிர்க்கட்சி கள் கூட்டாக கையெழுத்திட்டு கடிதம் எழுதியுள்ளன. இந்தியா கூட்டணியில் இடம் பெற்றுள்ள 16 எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்ற கூட்டம், தலைநகர் புதுதில்லியில் (ஜூன் 3) செவ்வாயன்று நடைபெற்றது. காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் சார்பில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, திரிணாமுல் காங்கிரஸ், ராஷ்ட்ரிய ஜனதா தளம், சமாஜ்வாதி கட்சி, தேசிய மாநாட்டுக் கட்சி, இந்திய யூனி யன் முஸ்லிம் லீக், புரட்சிகர சோசலிஸ்ட் கட்சி (ஆர்எஸ்பி), விடு தலை சிறுத்தைகள் கட்சி, கேரள காங்கிரஸ், மதிமுக, சிபிஐ(எம்எல்) லிபரேசன் மற்றும் சிவசேனா (உத் தவ்) உள்ளிட்ட கட்சிகளின் தலை வர்கள் கூட்டத்தில் பங்கேற்றனர். இக்கூட்டத்தில், பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் மற்றும் அதனைத் தொடர்ந்து நடத்தப்பட்ட ‘ஆபரேசன் சிந்தூர்’ குறித்து, ஒன்றிய பாஜக அரசு நாட்டு மக்க ளுக்கு உண்மைகளை வெளிப் படுத்த வேண்டும்; இதற்காக நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தை கூட்ட வேண்டும் என்று ஒன்றிய அரசை வலியுறுத்துவது என தீர்மானிக்கப்பட்டது. அத்துடன், இந்த கோரிக்கை யை முன்வைத்து, 16 எதிர்க்கட்சித் தலைவர்களும் கூட்டாக கை யெழுத்திட்ட கடிதமும் பிரதமர் நரேந்திர மோடிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. “பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் பூஜ்ஜிய சகிப்புத் தன்மை மற்றும் ஆபரேசன் சிந்தூர் குறித்து விளக்கம் அளிப்பதற்காக பல்வேறு சர்வதேச நாடுகளுக்கு அனைத்துக்கட்சி பிரதிநிதிகள் குழு சென்றுள்ளது. அக்குழுக்கள் நாடு திரும்பியதும், மழைக்காலக் கூட்டத் தொடருக்கு முன்பாக, ஜூலை மாதத் தில் நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தை கூட்ட வேண்டும்” என்று கடிதத்தில் பரிந்துரைக்கப்பட்டு உள்ளது. இதுதொடர்பாக காங்கிரஸ் தலைவர் தீபேந்தர் ஹூடா செய்தி யாளர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது, “நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடரை கூட்டக் கோரி 16 அரசியல் கட்சிகள் பிரத மருக்கு கடிதம் எழுதியுள்ளோம். பஹல்காம் பயங்கரவாதத் தாக்கு தலின் போதும், இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான மோதலின் போதும், அனைத்து எதிர்க்கட்சிகளும் நமது ராணு வத்துக்கும் இந்திய அரசாங்கத்திற் கும் ஆதரவாக நின்றன. அமெரிக்கா போர் நிறுத்தத்தை அறிவித்தபோது, அனைத்துக் கட்சி களும் நமது ஆயுதப் படைகளுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தொடரை நடத்த வேண்டும் என்று நாங்கள் கோரினோம். பஹல்காம், ஆபரேசன் சிந்தூர், அமெரிக்காவின் போர் நிறுத்த அறிவிப்பு வரை, நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும். பயங்கரவாதத்தை எவ்வாறு ஒழிப்பது மற்றும் நமது எதிர்கால உத்திகள் குறித்தும் நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும். இப்போது இந்திய அரசு தனது கருத்துக்களை உல கிற்கு முன் வைத்து வருவதால், நாடாளுமன்றத்திலும் அரசாங்கம் அதையே செய்ய வேண்டும் என்று நாங்கள் நினைக்கிறோம்” என்று தீபேந்தர் ஹூடா தெரிவித்தார். “பாஜக - தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆளும் மாநிலங்களின் முதலமைச்சர்களின் கூட்டத்தை மட்டும் கூட்டி, ‘ஆபரேசன் சிந்தூர்’ குறித்து பிரதமர் விளக்கியுள்ளார். இது பாரபட்சமானது; குறிப்பாக, தேசிய முக்கியத்துவம் வாய்ந்த ஒரு பிரச்சனையில், இதுபோன்ற விளக்கத்திற்காக, எதிர்க்கட்சி களைச் சேர்ந்தவர்கள் உட்பட நாட்டின் அனைத்து முதலமைச் சர்களின் கூட்டத்தையும் அரசாங்கம் கூட்ட வேண்டும்; அது மட்டுமல்லாது, நாடாளுமன்றத்தின் சிறப்பு அமர்வை கூட்டி, அரசாங்கம் முதலில் இந்திய மக்களுக்குப் பதில் கூற வேண்டும்” என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு கடந்த மே 17 அன்றே அறிக்கை மூலம் வலியுறுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.