tamilnadu

img

தஞ்சாவூர் ராசா மிராசுதார் அரசு மருத்துவமனை ஒப்பந்தத் தொழிலாளர்கள் போராட்டம்

தஞ்சாவூர் ராசா மிராசுதார் அரசு மருத்துவமனை  ஒப்பந்தத் தொழிலாளர்கள் போராட்டம்

தஞ்சாவூர், ஏப்.28-  தஞ்சாவூர் ராசா மிராசுதாரர் அரசு மருத்துவமனை பிரசவ வார்டில், அண்மையில் ஏற்பட்ட தீ விபத்தில், பெண்களையும், குழந்தைகளையும், தங்கள் உயிரைப் பணயம் வைத்து காப்பாற்றிய மருத்துவமனை ஒப்பந்த தொழிலாளர்கள், தங்களுக்கு சம்பளத்துடன் கூடிய மருத்துவ விடுப்பு, உரிய மருத்துவ சிகிச்சை, வேலை உத்தரவாதம், இஎஸ்ஐ மருத்துவ காப்பீடு அட்டை, இவற்றுடன் மாவட்ட ஆட்சியரின் பாராட்டு சான்றிதழ் வழங்க வேண்டும் என வலியுறுத்தி மருத்துவமனையில் உள்ளிருப்பு போராட்டம் அறிவித்தனர். இதைத் தொடர்ந்து, தஞ்சாவூர் வருவாய் கோட்டாட்சியர் செ. இலக்கியா மற்றும் மருத்துவமனை நிலைய அலுவலர், தஞ்சாவூர் வட்டாட்சியர், மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் ஆகியோர், தொழிலாளர்கள் தரப்பில் கலந்து கொண்ட சிஐடியு மாநிலச் செயலாளர் சி.ஜெயபால், சிபிஎம் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ஆர்.மனோகரன், மாதர் சங்கம் மாநிலச் செயலாளர் எஸ். தமிழ்ச்செல்வி, சிபிஎம் மாவட்டக் குழு உறுப்பினர் என்.குருசாமி, மாநகரச் செயலாளர் எம். வடிவேலன், மாதர் சங்க மாவட்டச் செயலாளர் இ. வசந்தி, சிஐடியு மாவட்டத் துணைச் செயலாளர் கே. அன்பு, தரைக்கடை சங்க மாவட்டத் தலைவர் ஆர்.மணிமாறன், மாணவர் சங்கம் மாவட்டத் தலைவர் கே.அர்ஜுன், சிபிஎம் நகரக்குழு உறுப்பினர்கள் கரிகாலன், ராஜன் மற்றும் தொழிலாளர்களுடன் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தினர்.  இதில், ஒப்பந்தத் தொழிலாளர்களின் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்படும் என அலுவலர்கள் உறுதி அளித்தனர். இதனைத் தொடர்ந்து தொழிலாளர்கள் போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது.