tamilnadu

img

சிபிஎம் தலைவர்களுடன் இலங்கை அமைச்சர்கள் சந்திப்பு

சென்னை, ஜனவரி 12 - இலங்கை கடற்தொழில், நீரியல் வளங்கள் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர் மற்றும் பெருந்தோட்டம், சமூக உட் கட்டமைப்பு தன் துறை துணை அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் ஆகியோர் ஜனவரி 12 ஞாயிறன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு அலுவலகத்திற்கு வருகை தந்தனர். கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம், அமைச்சர்களை பய னாடை அணிவித்தும், நூல்களை வழங்கியும் வரவேற்றார். மலைய கத்தைச் சேர்ந்த இரு அமைச்சர் களின் வருகை மகிழ்ச்சி அளிப்பதாக அவர் தெரிவித்தார். இச்சந்திப்பில் மத்தியக்குழு உறுப்பினர் உ.வாசுகி,  மாநிலச் செயற்குழு உறுப்பினர்கள் க.கனகராஜ், எஸ்.கண்ணன், மாநி லக்குழு உறுப்பினர் இரா.சிந்தன் ஆகியோர் கலந்து கொண்டனர். இலங்கையின் புதிய அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்  சார்பில் வாழ்த்துகள் தெரிவிக்கப் பட்டன. மேலும், பின்வரும் முக்கிய  கோரிக்கைகள் முன்வைக்கப் பட்டன: H     தமிழக மீனவர்களின் மீன்பிடி பிரச்சனைகளுக்குத் தீர்வு காண  வேண்டும் H     இலங்கைத் தோட்டத் தொழிலா ளர்களின் வாழ்வாதார மேம் பாட்டிற்கு முன்னுரிமை அளிக்க  வேண்டும் H     தமிழ்நாட்டு முகாம்களில் உள்ள  இலங்கைத் தமிழர்களுக்கு, குறிப்பாக வெளிநாடு செல்லும் மாணவர்களுக்கு, கடவுச்சீட்டு வழங்க வேண்டும் H    மாகாணத் தேர்தல்களை விரை வில் நடத்த வேண்டும் H    தமிழ் மொழிக்கு சம அந்தஸ்து வழங்க வேண்டும் இலங்கை அமைச்சர்கள் தங்கள்  உரையில், தேசிய மக்கள் சக்தி அர சாங்கம் தமிழ் மக்கள், இஸ்லாமியர் ஆகிய சிறுபான்மை மக்களின் பிரச்சனைகளில் உறுதியான கவ னம் செலுத்தும் என உறுதியளித்த னர். இரு தரப்பினரும் தொடர்ந்து நெருங்கிய உறவைப் பேண ஒப்புக்  கொண்டனர்.