tamilnadu

மருத்துவப் படிப்புக்கு கலந்தாய்வு எப்போது?

சென்னை,ஜன.8- தமிழகத்தில் 11 புதிய மருத்துவக் கல்லூரிகளை சேர்த்து 37 அரசு  மருத்துவக்கல்லூரிகள் மற்றும் 2 அரசு பல் மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. இதில் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கான 15 விழுக்காடு இடங்கள்  போக 4,277 எம்.பி.பி.எஸ். இடங்களும், 175 பல் மருத்துவ இடங்களும் உள்ளன. தனியார் மருத்துவக் கல்லூரிகளின் அரசு மற்றும்  நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வை யும் மருத்துவக் கல்வி இயக்ககம் நடத்துகிறது. இதன்படி 2021-2022 ஆம் கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு டிசம்பர் 19 ஆம் தேதி  தொடங்கியது. நீட் தேர்வில் தகுதி பெற்ற மாணவர்கள் இதற்கு விண்ணப் பித்தனர். விண்ணப்பம் பதிவு செய்வதற்கு அவகாசம் முடிந்த நிலை யில் 40,288 பேர் விண்ணப்பித்துள்ளனர். விண்ணப்ப படிவங்களை பதிவிறக்கம் செய்து தகுந்த ஆவணங்க ளுடன் நேரிலோ, தபால் வாயிலாகவோ, செயலர், மருத்துவக் கல்வி இயக்ககம், 162, ஈ.வே.ரா. நெடுஞ்சாலை, கீழ்ப்பாக்கம், 10 என்ற  முகவரியில் 10 ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பங் கள் பரிசீலிக்கப்பட்டு 2 வாரத்துக்குள் தரவரிசை பட்டியல் வெளி யிடப்படும் என்று மருத்துவ மாணவர் சேர்க்கை செயலாளர் வசந்தா மணி தெரிவித்தார். அகில இந்திய இடஒதுக்கீட்டுக்கான முதற்கட்ட கலந்தாய்வு  முடிந்ததும் மாநில அளவிலான கலந்தாய்வு தொடங்கும் என்றும் அவர்  தெரிவித்தார். இதனால், 2 வாரத்தில் மருத்துவ கலந்தாய்வு தொடங்கு வதற்கு வாய்ப்பு உள்ளது. சென்னையில் மருத்துவ கலந்தாய்வை நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் நடைபெற்று வருகின்றன. அகில இந்திய ஒதுக்கீடுக்கான முதல்கட்ட கலந்தாய்வு முடிந்தவுடன் இதற்கான தேதி அறிவிக்கப்படும்.