tamilnadu

தீக்கதிர் முக்கிய செய்திகள்

திருத்துறைப்பூண்டியில் கட்டுமானத் தொழிலாளர் சங்க கூட்டம்

திருத்துறைப்பூண்டி, ஜூன் 3- திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி தியாகி சிவராமன் நினைவிடத்தில் கட்டுமானத் தொழிலாளர் சங்க  கூட்டம் நடைபெற்றது. நிகழ்வில் மாவட்ட துணைத் தலைவர் கே.வேணுகோபால் தலைமை வகித்தார். மாவட்டக் குழு உறுப்பினர் கே.பாலமுத்து வரவேற் புரை ஆற்றினார். மாவட்ட துணைத் தலைவர் கே.வேணு கோபால் துவக்க உரையாற்றினார். புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். தலைவராக ஜி.முருகையன், செயலாளராக கே.பாலமுத்து, பொருளாளராக பி. சுரேஷ் உள்ளிட்டோர் தேர்வு செய்யப்பட்டனர்.  கம்பி, சிமெண்ட், எம்.சாண்ட் விலையை குறைத்து கட்டுமானத் தொழிலாளருக்கு வேலைவாய்ப்பை உத்தர வாதப் படுத்த வேண்டும். கட்டுமானத் தொழிலாளர் களுக்கு ஓய்வூதியம் ரூ.3000 ஆக உயர்த்தி வழங்க  வேண்டும். பொங்கல், தீபாவளி பண்டிகை காலங்களில்,  பாண்டிச்சேரி அரசு வழங்குவது போல் கட்டுமானத் தொழி லாளர்களுக்கு ரூ.5000 வழங்க வேண்டும் உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. நிகழ்வில் மாவட்டத் தலைவர் டி.ராமேந்திரன், மாவட்டச் செயலாளர் கே.பி.ஜோதிபாசு, மாவட்ட துணைச்  செயலாளர் கே.வேதையன் ஆகியோர் வாழ்த்துரை ஆற்றினர்.

பட்டா மாற்றம் செய்ய லஞ்சம்: இருவர் கைது  

தஞ்சாவூர், ஜூன் 5 - தஞ்சாவூர் மாவட்டம், திருவோணம் தாலுகா அம்மங் குடி கிராமத்தைச் சேர்ந்தவர் குமரேசன். இவரது நிலம் தோப்புவிடுதி கிராமத்தில் உள்ளது. கூட்டுப் பட்டாவில் உள்ள நிலத்திற்கு உட்பிரிவு செய்து, தனிப்பட்டா பெற,  தோப்புவிடுதி கிராம நிர்வாக அலுவலரான புதுக்கோட்டை மாவட்டம், மட்டங்கால் பகுதியை சேர்ந்த முருகேசன் (32)  என்பவரை அணுகியுள்ளார்.  அப்போது, முருகேசன் 5 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார். மேலும், பணத்தை திருவோணம் வட்டாட்சி யர் அலுவலகம் அருகே உள்ள இ-சேவை மையம் நடத்தி வரும் ஊர்காவல் படையில் பணியாற்றும் சுதா என்ப வரிடம் கொடுக்குமாறு கூறியுள்ளார். இந்நிலையில், லஞ்சம் கொடுக்க விரும்பாத முரு கேசன், தஞ்சாவூர் லஞ்ச ஒழிப்பு காவல்பிரிவில் புகார் அளித்தார். அவர்களின் அறிவுறுத்தலின்படி, ரசாயனம் தடவிய பணத்தை பெற்றுக் கொண்டு  குமரேசன், சுதா  நடத்தி வரும் இ-சேவை மையத்திற்கு வந்து, புதன்கிழமை  பணத்தை சுதாவிடம் கொடுத்தார். பிறகு, லஞ்சப் பணத்தை கிராம நிர்வாக அலுவலர் முருகேசனிடம் சுதா  வழங்கியுள்ளார். அப்போது, அங்கு மறைந்து இருந்த லஞ்ச ஒழிப்புத்  துறையினர் கிராம நிர்வாக அலுவலர் முருகேசன், சுதா இருவரையும் கையும் களவுமாக பிடித்தனர். பிறகு  இருவரையும் திருவோணம் வட்டாட்சியர் அலுவல கத்தில் வைத்து லஞ்ச ஒழிப்பு பிரிவு காவல் துணை கண் காணிப்பாளர் அன்பரசன், ஆய்வாளர் பத்மாவதி தலை மையில் சுமார் மூன்று நேரம் விசாரணை நடத்தி பின்னர்  இருவரையும் கைது செய்தனர்.

 கிள்ளுக்கோட்டை கிராமத்தில் விதைப்பந்து விதைக்கும் விழா

தஞ்சாவூர், ஜூன் 5-  தஞ்சாவூர் ஆர்.வி.எஸ் வேளாண்மைக் கல்லூரி மாண வர்களின் சார்பில், தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டி அருகே கிள்ளுக்கோட்டை கிராமத்தில், உலக சுற்றுச் சூழல் தினத்தையொட்டி விதைப்பந்து விதைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. புவி வெப்பமயமாதலால் பல்வேறு இயற்கை சீற்றங் கள் ஏற்பட்டு, உலகம் முழுவதும் பேராபத்தில் சிக்கித்  தவிக்கிறது. எனவே, விதைகளை விதைத்து மண்ணைக் காப்பது என்ற நோக்கில், தஞ்சாவூர் ஆர்.வி.எஸ் வேளாண்மை கல்லூரி மாணவர்கள் கிள்ளுக்கோட்டை கிராமத்தில், புதிய வனம் உருவாக்கும் வகையில் விதைப்பந்து விதைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. கல்லூரி இயக்குநர் பி.பாண்டியராஜன், கல்லூரி முதல்வர் எஸ்.வி.கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் சிறப்பு விருந் தினர்களாக பங்கேற்றனர். மேலும், கழக ஆலோசகர் முனைவர் ஜி. கருப்புசாமி, பி. ஹரிணி மற்றும் நாட்டு நலப்பணி திட்டம் ஒருங்கிணைப்பாளர், முனைவர் கே. கரிமனிஷா, முனைவர் பி.லிபிராபின் ஆகியோர் கலந்து கொண்டனர். அழிவின் விளம்பில் இருக்கும் பூமியை பாது காக்கும் நோக்கத்தில் விதைப்பந்துக்கள் விதைக்கப் பட்டன. மேலும் புங்கம், சவுக்கு, பூவரசன், கொன்றை போன்ற 1,200 விதைகள் விதைப் பந்துக்கள் மூலம் விதைக்கப்பட்டன.

தமிழக அரசின் சாதனை  குறும்படங்கள் திரையிடல்

திருவாரூர், ஜூன் 5 - திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி சட்டமன்ற தொகுதிக் குட்பட்ட பகுதிகளில் ஊரகப் பகுதிகளுக்கான மூன்றாம்  கட்ட மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்கள் நடைபெற்றன. முகாம்களில் 15 துறைகளைச் சேர்ந்த 44 சேவைகளை பொது மக்களுக்கு விரைவாக வழங்கிடும் பொருட்டு இத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.  இந்நிகழ்ச்சியில், செய்தி மக்கள் தொடர்புத் துறை யின் அதிநவீன மின்னணு திரை வாகனத்தின் மூலம் ‘நாடு  போற்றும் நான்காண்டு, தொடரட்டும் பல்லாண்டு’ என  தமிழக அரசின் சாதனைகளை விளக்கும் குறும்படங்களை தமிழக உயர்க் கல்வித்துறை அமைச்சர் முனைவர் கோவி. செழியன் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் வ.மோகனச்சந்திரன் ஆகியோர் பார்வையிட்டனர். செய்தி மக்கள் தொடர்பு அலு வலர் மீ.செல்வகுமார் உள்ளிட்ட அனைத்து துறை அரசு உயர்  அலுவலர்கள் உடனிருந்தனர்.

பெண்ணிடம் நகை பறிப்பு

புதுக்கோட்டை,  ஜூன் 5 - புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் ஈச்சங்காடு திடீர் நகரைச் சேர்ந்தவர் சுந்தரராஜ் மனைவி ராணி (43). இவர்,  புதன்கிழமை காலை சுமார்  8.30 மணியளவில், கிருஷ்ண பாரப்பட்டி பிரிவு சாலை அருகே  நடந்து வந்து கொண்டிருந் தார். அப்போது பின்பக்கமாக இரு சக்கர வாகனத்தில் வந்த  இருவர், திடீரென ராணியின் கழுத்தில் இருந்த 2.5 பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்றனர். இதுகுறித்து  ராணி அளித்த புகாரின்பேரில் கீரனூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.