தருமபுரி, பிப்.27- கட்டுமான பொருட்களின் விலையை குறைக்க வேண்டும் என சிஐடியு கட்டுமான தொழிலாளர் சங் கம் வலியுறுத்தி உள்ளது. சிஐடியு கட்டுமான தொழிலா ளர் சங்கத்தின் 6 ஆவது ஆண்டு பேரவை கூட்டம் தருமபுரி சிஐடியு அலுவலத்தில் மாவட்ட தலைவர் சி.கலாவதி தலைமையில் நடை பெற்றது. சிஐடியு மாவட்ட துணைத் தலைவர் பி.ஆறுமுகம் செங் கொடியை ஏற்றி வைத்தார். மாநாட்டை மாநில பொதுச்செயலா ளர் டி.குமார் துவக்கி வைத்தார். மாவட்ட பொதுச்செயலாளர் சி.சண் முகம், பொருளாளர் எஸ்.ரோஜா மணி ஆகியோர் அறிக்கையை சமர்பித்தனர். இதில், மாநில சிறப்புத் தலைவர் ஆர்.சிங்காரவேலு, மாவட்ட இணைச் செயலாளர் கே. ரங்கநாயகி, சிஐடியு மாவட்ட செய லாளர் சி.நாகராசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக, இம்மாநாட்டில் கட்டுமான தொழிலாளர்களின் மாத ஓய்வூதியத்தை ரூ.3 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும். கட்டு மான பெண் தொழிலாளர்களுக்கு 55 வயதில் ஓய்வூதியம் வழங்க வேண் டும். கட்டுமான பொருட்களின் விலையை குறைக்க வேண்டும். நல வாரியத்தில் பதிவு செய்வதை எளி மையாக்க வேண்டும். அலுவலகத் தில் நேரடி பதிவு முறையை அமல் படுத்த வேண்டும் என்பன உள் ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன. புதிய நிர்வாகிகள் தேர்வு இதைத்தொடர்ந்து சங்கத்தின் புதிய மாவட்ட தலைவராக சி.சண் முகம், மாவட்ட செயலாளராக சி. கலாவதி, மாவட்ட பொருளாளராக ஜி.நாகராஜன், மாவட்ட துணைத் தலைவர்களாக ஜி.பெருமாள், விக் ரம், செல்வராஜ், சி.ராஜா, மாவட்ட துணைச் செயலாளர்களாக எம். முருகேசன், எம்.பழனி, ரங்க நாயகி, மீனா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.