tamilnadu

img

காவலர்களுக்கு பணி நியமன ஆணை

சென்னை, ஜூலை 31- சீருடை பணியாளர் தேர்வு வாரியம் மூலம் தேர்வு செய்யப்பட்ட 2 ஆம்  நிலை காவலர்கள் 143 பேருக்கு திங்களன்று (ஜூலை 31) பணி நியமன ஆணைகளை சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வழங்கினார்.  அதனை தொடர்ந்து பல்வேறு துறை சார்ந்த திட்டங்களையும் முதல்வர் தொடங்கி வைத்தார். நெல்லை மாவட்டம், ராதாபு ரம் தொகுதியிலுள்ள 306  அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ரூ.6.86  கோடி செலவில் அமைக்கப் பட்டுள்ள திறன் வகுப்பறை கள் முதலமைச்சர் மு.க.  ஸ்டாலின் காணொலி மூலம் திறந்து வைத்தார்.  உயிரிழந்த பள்ளிக்கல்வித் துறை பணியாளர்கள் வாரிசுதாரர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார். செங்கல்பட்டில் ரூ.210 கோடி முதலீட்டில், மஹிந் திரா ஆராய்ச்சி மையத்தில், மின்கலம் பரிசோதனை ஆய்வகத்தையும் முதல மைச்சர் திறந்து வைத்தார்.  சுமார் 1,000 பேருக்கு வேலை வாய்ப்பு அளிக்கும் வகை யில் பரிசோதனை ஆய்வகம் திறக்கப்பட்டுள்ளது. திரு வண்ணாமலை செய்யாறு சிப்காட் தொழிற் பூங்கா வில் மின் வாகன விபத்து  பரிசோதனை ஆய்வகத்திற் கும்  முதல்வர் அடிக்கல் நாட்டினார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் ரகுபதி, அன்பில் மகேஸ் பொய்யா மொழி,  தலைமைச் செய லாளர் சிவ்தாஸ் மீனா, துறை யின் முதன்மை செயலாளர் பெ.அமுதா மற்றும் காவல் துறை உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.