வழக்கறிஞர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர ஒப்புதல்
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் மீது காலணி வீசிய வழக்கறிஞர் ராகேஷ் கிஷோர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. காலணி வீசிய சம்பவத்தை தொ டர்ந்து கிஷோர் மீது உடனடியாக அம் மாநில காவல்துறை எந்த வழக்குப்பதி வோ கைது நடவடிக்கையோ மேற் கொள்ளவில்லை. பார் கவுன்சிலில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இதற்கிடையே பாஜகவின் அகில இந்திய செய்தித்தொடர்பாளர் ஒருவர் கிஷோரை சந்தித்து நீண்ட நேரம் பேசியுள் ளார். இந்நிலையில் தற்போது கிஷோர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர அட்டர்னி ஜெனரல் வெங்கட்ரமணி ஒப்புதல் அளித்துள்ளார்.
