மாஸ்கோ, ஜன.3- கியூபப் புரட்சியின் வெற்றிக்கும், அதன் 63வது ஆண்டுக் கொண்டாட் டத்திற்கும் வாழ்த்துக்களைத் தெரிவிப்பதாக ரஷ்யாவின் ஜனாதிபதி விளாடிமீர் புடின் கூறியுள்ளார். இது குறித்து கியூபாவின் ஜனாதிபதி மிகுவேல் டியாஸ் கானெலுக்கு அவர் கடிதம் எழுதியிருக்கிறார். அதில் ரால் காஸ்ட்ரோவுக்கும், கியூபத் தீவின் மக்களுக்கும் வளமான 2022 ஆம் ஆண்டாக புத்தாண்டு அமை யட்டும் என்றும் வாழ்த்தியுள்ளார். மேலும், “வளர்ச்சியை நோக்கிய பயணத்தில் ஒரு பரந்துபட்ட பங்கு தாரராக இரண்டு நாடுகளும் சென்று கொண்டிருக்கின்றன. இருதரப்புத் திட்டங்களை நிறைவேற்றுவதில் இரண்டு நாடுகளும் இணைந்து செயல் படுகின்றன. இந்தத் திட்டங்கள் பெரும் வளர்ச்சியைக் கொண்டு வரும். அறிவியல், பொருளாதார, வர்த்தக, தொழில்நுட்ப மற்றும் மனிதாபி மானத் துறைகளில் இந்தத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன” என்று எழுதியுள்ளார்.
அமெரிக்கா போட்டுள்ள தடைகளால் பெரும்பலான ஐரோப்பிய நாடுகள் கியூபாவுடனான வர்த்தகத்தை மேற்கொள்ள முடியவில்லை. அந்தத் தடைகளை மீறி ரஷ்யாவும், சீனாவும் முக்கியமான சில திட்டங்க ளை கியூபாவில் செயல்படுத்த முன்வந்துள்ளன. அதோடு அண்மைக் காலங்களில் பல தென் அமெரிக்க மற்றும் மத்திய அமெரிக்க நாடுகளில் இடதுசாரி அரசுகள் அமைந்துள்ளதால் அவற்றிற்கிடையே நல்ல ஒத்து ழைப்பு உருவாகி வருகிறது. இந்நிலையில்தான் ரஷ்யா தனது ஒத்து ழைப்பை அதிகரித்திருக்கிறது. கியூபா ஜனாதிபதிக்கான தனது கடிதத்தில், “அண்மைக்கால நிகழ்வுகளில் இருதரப்பு மற்றும் சர்வதேச அளவிலான பிரச்சனைகளில் கியூபாவுடன் இணைந்து பணியாற்ற நான் எப்போதும் தயாராகவே இருக்கிறேன். புத்தாண்டில் புதிய புதிய இலக்குகளை அடைய ரஷ்யாவும், கியூபாவும் இணைந்து பணியாற்றுவோம்” என்று குறிப்பிட் டுள்ளார்.
மத்திய ஆசியாவிலும், தென் அமெரிக்காவிலும் அமெரிக்கா வின் பிடி தளர்ந்து வரும் நிலையில் இது புதிய திருப்பமாகக் கருதப்படு கிறது. கியூபாவைத் தனிமைப்படுத்தி விட்டோம் என்று கருதி வந்த அமெ ரிக்கா, இந்த விஷயத்தில் தனிமைப்படுவது அம்பலமாகியுள்ளது.ஐரோப்பிய ஆசிய பொருளாதார ஒன்றியத்தின் 34 அம்ச உடன்பாட்டில் கியூபா கையெ ழுத்திட்டதால் ரஷ்யா-கியூபா உறவு பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்த உடன் பாட்டில் கையெழுத்திட்டதன் மூலம் இந்தப் பொருளாதார ஒன்றியத்தில் பார்வையாளர் அந்தஸ்தோடு பங்கேற்பது கியூபாவுக்கு சாத்தியமாகி யுள்ளது.