சென்னை, ஏப்.1- தில்லியிலுள்ள அரசு மாதிரிப் பள்ளியை போல தமிழகத்திலும் விரைவில் மாதிரிப் பள்ளி தொடங் கப்படும் என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தில்லியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், வெள்ளியன்று (ஏப்.1) மேற்கு தில்லி, வினோத்நக ரிலுள்ள அரசு மாதிரி பள்ளியை பார்வையிட்டார். பள்ளியை பார்வை யிட வந்த முதல்வர் ஸ்டாலினை, தில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரி வால், துணை முதல்வர் மணீஷ் சிசோ டியா ஆகியோர் வரவேற்றனர். அந்தப் பள்ளி மாணவர்கள், முதல்வர் ஸ்டா லினுக்கு மலர் கொடுத்து வரவேற்றனர். பின்னர் தில்லி முதல்வர் கெஜ்ரி வால், அங்குள்ள அரசுப் பள்ளிகளில் டிஜிட்டல் முறையில் பாடங்கள் எப்படி கற்பிக்கப்படுகிறது, ஏசி வகுப்பறை கள் உள்ளிட்ட நவீன வசதிகளுடன் கூடிய இலவசக் கல்வி எவ்வாறு வழங்கப்படுகிறது என்பது குறித்து விளக்கி கூறினார். பள்ளியின் கீழ் தளத்தில் உள்ள அறையில் மாதிரி பள்ளி தொடர்பான வீடியோ திரை யிடப்பப்பட்டது. மேலும், பள்ளியின் முக்கிய அம்சங்கள் மற்றும் செயல் பாடுகள் குறித்து விளக்கப்பட்டது. மகிழ்ச்சி வகுப்பு தில்லியிலுள்ள அரசு மாதிரிப் பள்ளிகளில் வாரம் ஒருமுறை மகிழ்ச்சி வகுப்புகள் அதாவது புத்தக மில்லா வகுப்புகள் குறித்தும் முதல் வர் கேட்டறிந்தார். இந்த நாளில் மாணவர்களின் மன அழுத்தங்க ளைப் போக்கும் வகையில், இசை, யோகா உள்ளிட்டவை கற்பிக்கப்படு கிறது என்பது குறித்தும் விவரிக்கப் பட்டது. இந்தச் சந்திப்பின் போது டி.ஆர்.பாலு, தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் உள் ளிட்டோர் உடனிருந்தனர். பின்னர் பள்ளி மாணவர்களுடன் தமிழக முதல் வர் மு.க.ஸ்டாலின் கலந்துரையாடினார்.