tamilnadu

img

தோழர் எஸ்.பன்னீர்செல்வம் குடும்பத்தினருக்கு ஆறுதல்

தீக்கதிர் நாளிதழின் திருச்சி பதிப்பு பொதுமேலாளரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தோழருமான எஸ்.பன்னீர்செல்வம் உடல்நலக்குறைவால் கடந்த ஞாயிறு அன்று காலமானார்.  இந்நிலையில் புதனன்று மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் மறைந்த தோழர் பன்னீர்செல்வம்  இல்லத்திற்கு நேரில் சென்று அவரது மனைவி லிங்கராணி மற்றும் அவரது மகன் ஆனந்தகுமார் ஆகியோருக்கு ஆறுதல் கூறினார். அப்போது மாநிலக்குழு உறுப்பினர் எஸ்.ஸ்ரீதர், கந்தர்வக்கோட்டை சிபிஎம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சின்னதுரை, மாநகர் மாவட்ட செயலாளர் ஆர்.ராஜா, புறநகர் மாவட்ட செயலாளர் எம்.ஜெயசீலன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் சிவராஜ், தீக்கதிர் நிர்வாகி ஜெயபால் ஆகியோர் உடனிருந்தனர்.