போப் பிரான்சிஸ் மறைவுக்கு இரங்கல்
போப் பிரான்சிஸ் மறைவையொட்டி, தமிழக அரசு சார்பில் இரண்டு நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என்றும் போப் பிரான்சிஸ் இறுதி சடங்கு நடைபெறும் நாளன்று துக்கம் கடைப்பிடிக்கப்படும் என்றும் ஏற்க னவே அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், செவ்வாய்க் கிழமை (ஏப்.22) காலை 9.30 மணிக்கு சட்டப்பேரவை கூடி யதும், போப் பிரான்சிஸ் மறைவுக்கு இரங்கல் தீர்மானத்தை வாசித்த பேரவைத் தலைவர் மு. அப்பாவு, ‘முற்போக்கு கொள்கையோடு பெரும் மாற்றங்களை முன்னெடுத்த ஆளுமை’ போப் பிரான்சிஸ் என்றார். அதனைத் தொடர்ந்து, அனைத்து உறுப்பினர்களும் எழுந்து நின்று 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினர்.
சேலம் பூங்கா இடம் மீட்கப்படும்!
சேலம் மாநகராட்சியில் புதிய லே அவுட் போடப்படும் போது பூங்காவுக்கு ஒதுக்கப்படும் இடங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்படுவதாகவும், மாநகராட்சி பூங்கா அமைத்து பரா மரிக்கும் பணியை அரசே ஏற்குமா? என பாமக உறுப்பி னர் அருள் துணைக் கேள்வி எழுப்பினார். இதற்கு பதி லளித்து பேசிய நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என். நேரு, “பூங்காவிற்க்கு ஒதுக்கப்பட்ட இடத்தை எவராலும் ஆக்கிரமிக்க முடியாது. அப்படியே, ஆக்கிரமிப்பு செய்யப் பட்டிருந்தால் அது எப்படிப்பட்டவர்களாக இருந்தாலும் அவர்களிடம் இருந்து அந்த நிலம் மீட்கப்படுவதோடு, சேலம் மாநகராட்சிக்கு போதுமான பூங்காக்கள் அமைத்து தரப்ப டும்” என்றார்.
ரூ.100 கோடியில் திட்ட மதிப்பீடு
சேலம் மாநகராட்சி கழிவுகள் அனைத்தும், வீரபாண்டி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட நெய்க்காரப்பட்டியில் உள்ள கொட்டநத்தான் ஏரியில் கலந்து விடுகிறது. இதை தடுப்பதற்கு அரசு நடவடிக்கை எடுக்குமா? என்று எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் கே.என்.நேரு, “வீர பாண்டி ஏரி உட்பட மூன்று ஏரிகளை சுத்தம் செய்ய ரூ.100 கோடியில் திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டம் செயல்பாட்டிற்கு வந்தால், மாநகராட்சி கழிவுகள் ஏரி களில் கலப்பது முற்றிலும் நிறுத்தப்படும்” என்றார்.
நீலகிரியில் உயர்மட்ட பாலம்
நீலகிரியில் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தற்போது குறைந்தது 6 ஆயிரம் முதல் 8 ஆயிரம் வரை வாகனங்கள் வந்து செல்கின்றன. குன்னூர் மத்திய கோத்தகிரி சாலை, உதகை மேட்டுப்பாளையம் சந்திக்கும் இடத்தில் ரயில்வே கேட் உள்ளது. அந்த கேட் மூடியதும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் அணிவகுத்து நிற்பதால், போக்குவரத்து ஸ்தம்பித்தது. இதனால் உள்ளூர் மக்களும் அவதிப்படு கிறார்கள். எனவே, அந்த இடத்தில் உயர்மட்ட பாலம் அமைத்து தர அரசு முன்வருமா? என்று அரசு கொறடா ராமச் சந்திரன் துணைக் கேள்வி எழுப்பினார். இதற்கு பதில ளித்து பேசிய அமைச்சர் எ.வ.வேலு, “சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருவதால், குன்னூ ரில் இருந்து புறவழிச்சாலை அமைத்து கொடுத்துள்ளோம். சமீபத்தில்தான் அதை முதலமைச்சர் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார். உறுப்பினர் குறிப்பிடும் சாலை தேசிய நெடுஞ்சாலை ஆகும். திட்ட மதிப்பீடு தயார் செய்து ஒன்றிய அரசுக்கு உரிய அழுத்தம் கொடுத்து வருகிறோம். அனுமதி கிடைத்ததும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” என்றார்.
2 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல்
தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தனியார் பல்கலைக்கழகங்கள் மற்றும் தமிழ்நாடு பொது கட்டிட உரிமை திருத்தச் சட்ட மசோதாகளுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார். ஏற்கனவே, 10 சட்ட மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காத நிலையில், உச்சநீதிமன்றம் தனது தனி அதிகாரத்தை பயன்படுத்தி ஒப்புதல் அளித்து, அது தமிழக அரசிதழிலும் வெளி யிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
போப் இறுதி நிகழ்ச்சியில் அமைச்சர் சா.மு. நாசர் பங்கேற்பு!
சென்னை: கத்தோலிக்க திருச்சபையின் 266 ஆவது தலை வர் போப் பிரான்சிஸ் உடல்நலக்குறைவு காரணமாக தனது 88 ஆவது வயதில் உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து உலகம் முழுவதும் இருந்து அவருக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டு வரு கிறது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரி வித்திருந்தார். இந்நிலையில், ரோம் நகர் வாடிகனில் நடை பெறும் இறுதி நிகழ்ச்சியில், தமிழ்நாடு அரசின் சார்பில் சிறு பான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத் துறை அமைச்சர் சா.மு. நாசர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் இனிகோ எஸ்.இருதயராஜ் ஆகியோர் கலந்து கொள்ள தமிழ் நாடு முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
பழைய ஓய்வூதியத் திட்டம்
சென்னை: சட்டப்பேரவையில் வினாக்கள்-விடைகள் நேரத்தில், “தமிழக அரசு ஊழியர்களின் நீண்ட நாள் கோரிக்கையான பழைய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தப் படுமா? என அதிமுக எம்எல்ஏ எழுப்பிய கேள்விக்கு பதிலளித்து பேசிய நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, “அரசு ஊழியர்கள் நலனில் மிகுந்த அக்கறையோடு அரசு செயல் பட்டு வருகிறது. பழைய ஓய்வூதியத்தை பொறுத்தவரையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. மேலும், அரசு ஊழியர்கள், ஆசிரி யர்கள் பல்வேறு கருத்துகளை அந்தக் குழுவிடம் தெரிவித்து உள்ளனர். பழைய ஓய்வூதியத் திட்டம் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கவனித்து வருகிறார். உரிய நேரத்தில் சரியான முடிவு எடுக்கப்படும்” என்றார்.