சிதம்பரம், ஜூலை 10 - மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் சகோதரர் கே. ராதாகிருஷ்ணன் (66) சிதம்பரம் அருகே அண்ணா மலை நகர் பேரூராட்சிக்கு உட்பட்ட திடல் வெளி பகுதி யில் வசித்து வந்தார். உடல் நலக்குறைவால் தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், செவ்வாய்க்கிழமை (ஜூலை 9) சிகிச்சை பலனின்றி கால மானார். அவரது உடல் சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்டு அங்கு அஞ்சலிக் காக வைக்கப்பட்டது. முதலமைச்சர் இரங்கல் இந்த தகவலை அறிந்த தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின், திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி யின் மாநிலச் செயலாளர் இரா. முத்தரசன், முதல் வரின் தனிச் செயலாளர் தினேஷ் ஆகியோர் தொலைபேசியில் கே.பால கிருஷ்ணனை தொடர்பு கொண்டு இரங்கல் தெரி வித்தனர். மேலும், வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன் னாள் தலைவர் கே.எஸ். அழ கிரி, மூவேந்தர் முன்னேற்ற கழக தலைவர் ஸ்ரீதர் வாண்டையார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அர சியல் தலைமைக்குழு உறுப் பினர் ஜி. ராமகிருஷ்ணன், மத்திய குழு உறுப்பினர் உ. வாசுகி, மாநில செயற்குழு உறுப்பினர்கள் எம்.குண சேகரன், கே.சாமுவேல் ராஜ், சட்டமன்ற உறுப்பினர் நாகை மாலி மற்றும் சிபிஎம் மாவட்டச் செயலாளர்கள் உள்ளிட்ட தலைவர்கள், பல்வேறு அரசியல் கட்சி கள், அமைப்புகளின் தலை வர்கள், உறவினர்கள் அஞ் சலி செலுத்தினர். பின்னர் அதே பகுதியில் உள்ள இடு காட்டில் இறுதி நிகழ்ச்சி நடந்தது.