tamilnadu

img

இந்திய அரசமைப்பு சட்டத்தை அவமதிக்கும் ஒன்றிய பாஜக அரசுக்கு கண்டனம்

இந்திய அரசமைப்பு சட்டத்தை அவமதிக்கும் ஒன்றிய பாஜக அரசை கண்டித்தும்  இந்தி மொழியை திட்டமிட்டு திணிக்கும் போக்கை கைவிட வேண்டும், மத்திய பல்கலைக்கழகத்தின் இளநிலை படிப்பிற்கு நுழைவு தேர்வு என்ற அறிவிப்பை திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மதுரை பெத்தானியாபுரத்தில் ஏப்ரல் 19 செவ்வாயன்று  கண்டனக்கூட்டம் நடைபெற்றது.  இக்கூட்டத்திற்கு கட்சியின் மேற்கு  - 1 பகுதிக்குழு செயலாளர் கு. கணேசன் தலைமை வகித்தார். மாநகர் மாவட்டச் செயலாளர்  மா.கணேசன், புறநகர் மாவட்டச் செயலாளர் கே.ராஜேந்திரன்,  மூத்த தலைவர் சி. ராமகிருஷ்ணன், மாநிலக்குழு உறுப்பினர்கள் இரா.விஜயராஜன், எஸ்.கே.பொன்னுத்தாய், எஸ்.பாலா, மாவட்ட  செயற்குழு உறுப்பினர் ஜா. நரசிம்மன்  ஆகியோர் கலந்துகொண்டனர். பகுதிக்குழு உறுப்பினர் கருத்த கண்ணன் நன்றி தெரிவித்தார். மாநில செயற்குழு உறுப்பினரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சு.வெங்கடேசன் சிறப்புரையாற்றினார்.