தோழர் வ.சுப்பையா 1917 பிப்ரவரி 7 அன்று பாண்டிச்சேரியில் பிறந்தார். இவர் கலவை கல்லூரி உயர் நிலைப் பள்ளியில் கல்வி கற்றார். ஆரம்பகால அரசியல் வாழ்வில் காந்தி யால் ஈர்க்கப்பட்டார் .1933 ஆம் ஆண்டு அரிஜன சேவா சங்கம் துவக்கினார் .இவர் “சுதந்திரம்” என்ற பத்திரிகை நடத்தி வந்தார். இவர் புதுவை ஒன்றிய பிரதேசத்தில் தொழிற்சங்க இயக்கம் உருவாக்கிய முன்னோடி . 12 மணி நேர வேலை, மிக குறைவான ஊதியம்,தொழிற்சங்க உரிமை மறுப்பு போன்ற பல இன்னல்களை அனுபவித்து வந்த 15,000 ஜவுளி தொழிலாளர்களை 1935 ஆம் ஆண்டு தோழர் வ.சுப்பையா ஒருங்கிணைத்தார். 1935, 36 களில் புதுவைப் பஞ்சாலை களில் நடைபெற்ற போராட்டங்கள் அனைத்திற்கும் வழிகாட்டியாகவும் உந்து சக்தியாகவும் இருந்து செயலாற்றியவர். 1936 இல் எட்டு மணிநேர வேலை உள்ளிட்ட தொழிற்சங்க உரிமைகள் கோரி மூன்று பஞ்சாலைகளின் தொழிலாளர்கள் இணைந்து நடத்திய போராட்டத்தை ஒடுக்க 1936 ஜூலை 30 அன்று பிரஞ்சு ஏகாதிபத்தியம் ராணுவத்தின் துணை யோடு அடக்குமுறையைக் கட்டவிழ்த்து விட்டது. துப்பாக்கிச் சூட்டில் 12 தொழி லாளர்கள் உயிரிழந்தனர். நூற்றுக் கணக்கானோர் காயமடைந்தனர்.
இச்சம்பவம் இந்தியா மட்டுமில்லா மல் உலக நாடுகளின் கவனத்தைப் புதுச் சேரியின் பக்கம் திருப்பியது. இப்போராட் டத்தை முன்னின்று நடத்தியவர் வ.சுப்பையா. அதன் விளைவாக 1937 ஏப்ரல் 6 இல் பிரஞ்சு- இந்தியாவிற்கான தொழிற்சங்கச் சட்டம் ஒன்று இயற்றப் பட்டது. அதன்படி தொழிலாளர்களுக்கு நாள் ஒன்றுக்கு 8 மணிநேர வேலையும் தொழிற்சங்கம் அமைக்கும் உரிமையும் வழங்கப்பட்டன. ஆசிய நாடுகளிலேயே 8 மணிநேர வேலை என்பது புதுச்சேரியில்தான் முதன் முதலாக அமலாக்கப்பட்டது. அத்து டன் தொழிலாளர்களுக்கான கூட்டு ஒப் பந்தம், ஓய்வுக்கால ஊதியம், பெண் ஊழி யர்களுக்கும் அவர்கள் குழந்தைக ளுக்கும் சமூகப்பயன் அளிக்கும் திட்டங்களும் வரையறுக்கப்பட்டன. தோழர் வ.சுப்பையா 1998 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 12ஆம் நாள் காலமானார்.
-பெரணமல்லூர் சேகரன்