இந்தியாவில் முதன் முதலில் சென்னை மெரினா கடற்கரையில் 1923ஆம் ஆண்டு மே 1ஆம் தேதி சிந்தனை சிற்பி தோழர் சிங்காரவேலர் செங்கொடியை ஏற்றி மே தினத்தை கொண்டாடினார். அதன் நூற்றாண்டை நினைவுகூறும் வகையில் மெரினா கடற்கரை உழைப்பாளர் சிலை அருகே மூத்த தொழிற்சங்க தலைவர் டி.கே.ரங்கராஜன் கொடி ஏற்றினார். இந்நிகழ்ச்சியில் சிபிஎம் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், சிஐடியு மாநிலத் தலைவர் அ.சவுந்தரராசன், பொதுச் செயலாளர் ஜி.சுகுமாறன், அகில இந்திய துணைத் தலைவர் ஏ.கே.பத்மநாபன், சென்னை மாநகராட்சி செங்கொடி சங்கத்தின் பொதுச்செயலாளர் சீனிவாசலு, சிஐடியு மத்திய சென்னை மாவட்டத் தலைவர் எம்.சந்திரன், செயலாளர் சி.திருவேட்டை உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.