tamilnadu

img

தோழர் ராம்ஜி பணிநிறைவு பாராட்டு விழா

புதுச்சேரி, ஜூன் 2- எல்ஐசி நிறுவனத்தில் 35 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றிய தோழர் ஆர்.எம்.ராம்ஜி பணி ஓய்வு பெற்றதையொட்டி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதுச்சேரி உழ வர்கரை நகரக்குழு சார்பில் பாராட்டு விழாவும் சிறப்பு கருத்தரங்கமும் புதனன்று (ஜூன் 1)  நடைபெற்றது. வீர.அரிகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற கருத்தரங்கில் “எல்ஐசி நிறுவனத்தை பாதுகாப் போம்” என்ற தலைப்பில்  நடைபெற்ற கருத்தரங் கத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயற்குழு உறுப்பினர் கே.கனகராஜ் உரையாற்றினார். அவர்  தமது உரையில், “சுதந்திர  இந்தியாவின் அடையாள மாக திகழும் வேற்றுமையில் ஒற்றுமையாக வாழும் மக்கள் மத்தியில் பிரிவினை வாதத்தை ஏற்படுத்தி பகைமை வளர்த்து வரு கின்றனர். நாம்  எச்சரிக்கை யாக இருக்க வேண்டிய தருணம் இது.  இந்திய வரலாறு ஒன்றிய பாஜக ஆட்சியில் திட்டமிட்டு சீர்குலைக்கப்படுகிறது. மக்களின் சொத்தான எல்ஐசி நிறுவனத்தை சீரழிக்க துவக்கியுள்ளனர். எல்ஐசி போன்ற பொதுத் துறை நிறுவனங்களை விற்பனை செய்வதற்கு எதிராகவும், மதவெறிக்கு எதிராகவும் தேசத்தை பாதுகாக்கும் போராட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியுடன் ராம்ஜி போன்ற தேசபக்தர்கள் தொழிற் சங்கம் சார்பாகவும் போராடி வருகிறார்கள். இத்தகைய போராட்டத்திற்கு முழு ஒத்துழைப்பு கொடுக்கும் ராம்ஜி குடும்பத்துக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்வதாக கூறினார்.

முன்னதாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பிரதேச செயலாளர் ஆர். ராஜாங்கம், மூத்த தலைவர்கள் தா.முருகன், கே.முருகன், நடராஜன்,  ராமக்கிருஷ்ணன், கல்வியாளர்கள் கிருஷ்ண மூர்த்தி, பிரின்ஸ் கஜேந்திர பாபு, செயற்குழு உறுப்பி னர்கள் சுதா, ராமச்சந்திரன், கொளஞ்சியப்பன், சீனிவாசன், கலியமூர்த்தி, சத்தியா மற்றும் பிரதே சக்குழு உறுப்பினர்கள், இடைக்குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட பலரும் ராம்ஜிக்கு பாராட்டு தெரிவித்தனர்.

தீக்கதிர் வளர்ச்சி நிதி

இந்த பாராட்டு விழாவை யொட்டி தீக்கதிர் வளர்ச்சி நிதி 25,000 ரூபாய்க்கான காசோலையை தோழர் ராம்ஜி மற்றும் அவரது துணைவியார் தீபா ராம்ஜி மற்றும் அவரது பிள்ளை கள் மாநில செயற்குழு உறுப்பினர் கே.கனகராஜிடம் வழங்கினர். புதுவை சப்தர்ஹாஷ்மி கலைக் குழுவினரின் கிராமிய பாடல்கள் இசை நிகழ்ச்சி நடைபெற்றது.