தோழர் ஆர்.உமாநாத் மாணவப் பருவத் திலேயே கம்யூனிஸ்ட் இயக்க அரசிய லில் ஈடுபட்டார். அண்ணாமலைப் பல்கலைக் கழகத்திலிருந்து சென்னை கட்சி மையத்துக்கு சென்றார். முழு நேர ஊழியராகச் செயல் பட்டார். தொழிற்சங்க அரங்கில் இயங்கினார். போராட்டக் களங்களில் முன்னின்றார். சென்னை சதிவழக்கு, திருச்சி சதி வழக்குக ளில் சிறைப்பட்டார். எனினும் சிந்தை கலங்கார். மக்கள் மன்றத்தில் போராடினார். நாடாளுமன் றம்,சட்டமன்றத்தில் மக்கள் நலனுக்காய் வாதா டினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநி லக்குழு, மாநில செயற்குழு, மத்தியக்குழு, அரசியல் தலைமைக்குழு என உழைப்பால் பொறுப்புக்கு உயர்ந்தார். சிஐடியுவின் தலை மைப் பொறுப்பிலும் சிறந்து விளங்கி சிகரம் தொட்டார். தொழிலாளர் உரிமைக்காய் பாடு பட்ட அவரது வழியில் தொடர்ந்து செயல்பட்டு உரிமை காப்போம்! முன்னேறுவோம்!