tamilnadu

img

வரலாற்றில் வாழும் தோழர் என்.வரதராஜன் நினைவு நாள்

பஞ்சாலைத் தொழிலாளியாக வாழ்வைத் துவக்கி பாட்டாளி மக்களின் தலைவராக உயர்ந்தவர்.  ஒன்றுபட்ட கம்யூனிஸ்ட் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்ட அவர்,பின்னர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து மாவட்டச் செயலாளர்,மாநிலச் செய லாளர், மத்தியக்குழு உறுப்பினர் என பல்வேறு பொறுப்பு களை திறம்பட நிறைவேற்றியவர். கட்சியின் சார்பில் சட்டப்பேரவைக்கு தேர்வு செய்யப் பட்டு, மக்களின் குரலாக முழங்கியவர்.  தீக்கதிர் நாளேடு நீடிக்கவும் நிலைக்கவும் அவரது பங்கு அளப்பரியது. அருந்ததிய மக்களுக்கான உள்ஒதுக்கீட்டை உறுதி செய்வதற்கான போராட்டத்தை வழிநடத்தியது உட்பட அவரது தொண்டு என்றென்றும் போற்றப்படும்.

இன்று (ஏப்ரல். 10) தோழர் என்.வரதராஜன் நினைவு நாள்