tamilnadu

img

தோழர் எம்.கண்ணன் தாயார் சிட்டு காலமானார்

மதுரை
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயற்குழு உறுப்பினரும், மேலூர் தாலுகாச் செயலாளருமான எம்.கண்ணன் அவர்களின் தாயார் எம் சிட்டு(69) உடல் நல குறைவினால் புதன்கிழமை மாலை காலமானார்.

அன்னராது மறைவு செய்தி அறிந்து மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன், கட்சியின் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் எஸ்.பி.இளங்கோவன், மாவட்டக் குழு உறுப்பினர்கள் எஸ்.மாயாண்டி, வி.அடக்கிவீரணன், கிழக்கு தாலுகாச் செயலாளர் எம்.கலைச்செல்வன், மற்றும் எஸ்.ஜெயராமன், எஸ்.பி.மணவாளன், ஏ.ராஜேஸ்வரன், ஏ.சுப்பரமணியன் உட்பட கூட்டணி கட்சி தலைவர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு அவரது உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்கள். இறுதி நிகழ்ச்சி வியாழன்று நண்பகல் தெற்குபட்டியில் நடைபெற்றது. மறைந்த சிட்டு அவர்களுக்கு  லெட்சுமி என்ற மகளும் எம்.பூபதி, எம்.கண்ணன், எம்.பிரபு  என மூன்று மகன்கள் உள்ளனர்.  கட்சியின் மாநிலச் செயற்குழு உறுப்பினர் மதுக்கூர் இராமலிங்கம், புறநகர் மாவட்டச் செயலாளர் சி.ராமகிருஷ்ணன், மாநகர் மாவட்டச் செயலாளர் இரா.விஜயராஜன் மாநிலக் குழு உறுப்பினர் எஸ்.கே.பொன்னுத்தாய் ஆகியோர் உட்பட பலர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு தங்களது இரங்கலை தெரிவித்தனர்.

;