பி.டி.ஆர் என்று அழைக்கப்பட்ட பி.டி. ரணதிவே என்ற பாலசந்திர திரியம்பக் ரணதிவே சாதி, மத பேதங்களை கடந்த சீர்திருத்த குடும்பத்தில் மும்பை யில்1904ஆம் ஆண்டு பிறந்தார். பள்ளியில் படிக்கும் போதே தனக்கு செலவுக்கு தரும் பணத்தை சேர்த்து வைத்து தலித் மாணவர்களின் புத்தகம், எழுதுகோள் வாங்க செலவழித்தவர். பம்பாய் பல்கலைக்கழகத்தில் முதுகலை பொருளாதாரத்தில் மாகாணத்திலேயே முதல் மாணவனாக தேர்ச்சி பெற்றவர். அவரது படிப் பிற்கும் திறமைக்கும் அரசின் உயர் பதவியில் அமர்ந்தி ருக்க முடியும். ஆனால் கம்யூனிஸ்ட் கட்சி முழு நேர ஊழியர் என்ற பொறுப்பை விரும்பி ஏற்றார். 1943 ஆம் ஆண்டு பம்பாயில் நடைபெற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முதல் மாநாட்டில் பிடிஆர் அர சியல் தலைமைக் குழுவிற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். 1946ல் வீறு கொண்டு எழுந்த விடுதலைப் போரின் முத்தாய்ப்பான கப்பல் படை எழுச்சி போராட்டத்தை ஒருங்கிணைப்பதில் பெரிதும் பங்காற்றினார். ஆவேச உரைகள், எழுத்துப் பணி என்று பம்பாய் தொழிலாளி வர்க்கத்தை திரட்ட அரும்பாடுபட்டார். 1946 பிப்ரவரி 22ஆம் தேதி பம்பாயில் 32 லட்சம் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்து வீதிக்கு வந்தார்கள். அதை முன்னின்று நடத்தியவர் பிடிஆர்.
1948ல் கல்கத்தாவில் நடைபெற்ற கட்சியின் இரண்டாவது மாநாட்டில் பிடிஆர் பொதுச்செயலாள ராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 1964ல் மார்க்சிஸ்ட் கட்சி உதயமானது. மார்க் சிஸ்ட் கட்சியை உருவாக்கிய நவரத்தினங்களில் ஒருவர் தோழர் பிடிஆர். விஞ்ஞானம் மற்றும் தொழில் நுட்பத்தில் மிகுந்த அக்கறை காட்டினார் பிடிஆர். 1980ல் கல் கத்தாவில் நடைபெற்ற விஞ்ஞான ஆராய்ச்சி கருத்த ரங்குகளில் கலந்து கொண்டு உரையாற்றினார். “விஞ்ஞானம் என்பது உற்பத்தி சக்திக்கு உதவியாக இருந்தது; ஆனால் இப்போது விஞ்ஞானமே உற்பத்தி சக்தியாகிவிட்டது” என்பது, தோழர் பிடிஆரின் தீர்க்கதரிசி களான வார்த்தைகள் ஆகும்.
“உலகம் முழுவதும் தற்போது மகத்தான மாற்றங் கள் ஏற்பட்டுக் கொண்டிருக்கின்றன. விஞ்ஞானமும் தொழில் வளர்ச்சியும் இல்லாத எந்த ஒரு நாடும் முன் னேற முடியாது. சுயசார்பு என்ற ஒரு பாதையை பின் பற்ற விரும்பும் எந்த ஒரு நாடும் நவீன விஞ்ஞானம் மற்றும் தொழில் நுட்பத்தை புறக்கணிக்க முடியாது. உள்நாட்டு திறன் வளர்ச்சி இல்லாமல் எந்த நாடும் தன் சுதந்திரத்தை தக்கவைத்துக் கொள்ள முடியாது. ஏகாதிபத்திய சக்திகளின் அதிகரித்து வரும் நிர்பந்தத் தின் காரணமாக பொதுத் துறைகளை நிர்மூலமாக்கு வது உள்நாட்டு விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியைக் கட்டுப்படுத்துவது போன்றவை முத லாளித்துவ பாதையின் தோல்வியை படிப்படியாக வெளிப்படுத்துகிறது” என்று பிடிஆர் தீர்க்கதரி சனமாகக் கூறினார். இந்திய தொழிலாளி வர்க்கத் தின் ஒப்பற்ற தளபதியாக விளங்கிய தோழர் பிடிஆர் 1990ம் ஆண்டு ஏப்ரல் 6ம் தேதி காலமானார். மார்க்சிஸ்ட் கட்சியை உருவாக்கி வளர்த்த நவரத்தி னங்கள் என்று போற்றப்பட்ட முதல் அரசியல் தலை மைக் குழு உறுப்பினர்கள் 9 பேரில் ஒருவராக இருந்த பிடிஆர் மார்க்சிஸ்ட் கட்சியின் 23வது அகில இந்திய மாநாடு கண்ணூரில் துவங்கும் நாளான ஏப்ரல் 6 அன்று, அவரது நினைவை நெஞ்சில் ஏந்தி வீறுடன் புரட்சிப் பயணம் தொடர உறுதியேற்போம்!
ஆர்.ராஜா
சிபிஐ(எம்) திருச்சி மாநகர் மாவட்டச் செயலாளர்