tamilnadu

முதுகலை ஆசிரியர் பணி: இன்று கணினி அறிவியல் தேர்வு

சென்னை,பிப்.19- தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் முதுகலை ஆசிரியர், உடற்கல்வி இயக்கு நர் நிலை-1, கணினி பயிற்றுநர் நிலை-1க் கான 2,207 பணியிடங்களை நிரப்புவதற்கு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 9 ஆம் தேதி  வெளியிட்டது. இந்த எழுத்துத் தேர்வு   கடந்த 12 ஆம் தேதி  தமிழகம் முழுவதும் தொடங்கியது. பிப்.20 ஆம் தேதி முடிவடை கிறது. பி.எட், எம்.எட்., படித்த வெளிமாவட்டங் களில் வசிக்கும் பட்டதாரிகள் பங்கேற்று தேர்வு எழுதி வருகின்றனர். பிப்.19 அன்று  நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் காரணமாக தேர்வு நடக்கவில்லை. பிப்.20 ஞாயிறன்று (பேட்ஜ்-7) கணினி அறிவியல் பாடப்பிரி விற்கு தேர்வு நடைபெறுகிறது. இதற்கான மாவட்ட நுழைவுச்சீட்டு மற்றும் தேர்வு மைய  நுழைவு சீட்டு ஆகியவற்றை தமிழ்நாடு  ஆசிரியர் தேர்வு வாரியம் இணைய தளத்தில் விண்ணப்பதாரர்கள் பதிவு இறக்கம் செய்துக் கொள்ளலாம் என்று  தெரிவிக்கப்பட்டுள்ளது. எழுத்துத்தேர்வு முடிவடைவதை அடுத்து கேள்வித்தாளுக் கான விடை குறிப்புகள் விரைவில்  வெளியிட ப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.