tamilnadu

ஓய்வூதியர் நலன் முற்றிலும் புறக்கணிப்பு

சென்னை, மார்ச் 19 - தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையில் ஓய்வூதி யர் நலன் முற்றிலுமாக புறக்கணிக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சங்கத்தின் மாநிலத் தலைவர் நெ.இல.சீதரன், பொதுச் செயலாளர் பி.கிருஷ்ணமூர்த்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழக அரசின் 2022-23ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் ஒரு பக்கம் நல்ல முன்மொழிவுகளை அறிவித்துள்ளது. அதேநேரத்தில் இந்த அரசு அமைய அயராது உழைத்த அரசு ஊழியர், ஆசிரியர், ஓய்வூதி யர் நலன்கள் முற்றிலும் புறக்கணிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்தல், தேர்தல் அறிக்கையில் தெரிவித்த 70 வயது நிரம்பிய உடன் ஊதிய உயர்வு, குறைந்த சம்பளம் பெறும் சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியம் அளித்தல் போன்ற எதிர் பார்த்த அறிவிப்புகள் பட்ஜெட்டில் இடம் பெறவில்லை. இது ஏமாற்றத்தை அளிக்கிறது. இவற்றை தமிழக முதல்வர் தனது பதிலுரையில் நிவர்த்தி செய்வார் என்று எண்ணுகிறோம். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.