tamilnadu

img

12 மாவட்டங்களில் சமுதாய அளவிலான புற்றுநோய் கண்டறியும் திட்டம் தொடங்கியது

12 மாவட்டங்களில் சமுதாய அளவிலான புற்றுநோய் கண்டறியும் திட்டம் தொடங்கியது

திருவள்ளூர், மே 12 - மாநில அளவில் முதல் கட்டமாக  12 மாவட்டங்களில் சமுதாய அளவி லான புற்றுநோய் கண்டறியும் முகாமை திருவள்ளூர் அருகே திருப் பாச்சூர் துணை சுகாதார நிலை யத்தில் தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடை பெற்றது. இந்த நிகழ்விற்கு ஆட்சியர் மு.பிரதாப் தலைமை வகித்தார். மக்களவை உறுப்பினர் சசிகாந்த் செந்தில் முன்னிலை வகித்தார். மக்கள் மற்றும் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், சிறுபான்மையினர் நலம் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத் துறை அமைச்சர் சா.மு.நாசர் ஆகியோர் சமுதாய அளவிலான புற்றுநோய் கண்டறியும் விரி வாக்க திட்டத்தை தொடங்கி வைத்தனர். அதைத்தொடர்ந்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசுகையில், “தற்போதைய நிலையில் பொது மக்களிடையே புற்றுநோய் அதி கரித்து வருகிறது. மாநில அளவில்  ஏற்கனவே ஈரோடு, ராணிப்பேட்டை,  திருப்பத்தூர், கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்களில் 20  லட்சம் பேருக்கு புற்றுநோய்  பரிசோதனை மேற்கொள்ளப்பட் டது. அதில் 15.48 லட்சம் பேர் பரிசோதனை செய்தனர். அதில் 359 பேருக்கு புற்றுநோய் உள்ளது  கண்டறியப்பட்டது. அவர்கள் தற்போது சிகிச்சையில் இருந்து வருகின்றனர்.  எனவே ஆரம்ப கட்டத்தி லேயே கண்டறிந்தால் புற்றுநோயை  எளிதில் தீர்க்க முடியும். இதைத்  தொடர்ந்து மாநில அளவில் மேற் கொள்ள ரூ.27 கோடியில் ஒதுக்கீடு செய்து 12 மாவட்டங்களில் வாய்ப்  புற்றுநோய், கர்ப்பப்பை வாய்  புற்றுநோய், மார்பக புற்றுநோய் களை கண்டறியும் திட்டம் திரு வள்ளூர் அருகே திருப்பாச்சூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. ஆரம்பத்திலேயே கண்டறிந்து தடுக்கும் வகையில், பொதுமக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இதற்கு ஒவ் வொரு குடும்பமும் ஒத்துழைக்க வேண்டும். புற்றுநோய் அதிகரித்து வரும் நிலையில், சமுதாய அளவில் குடியிருப்புக்கு அருகே புற்றுநோய் கண்டறியப்பட உள்ளது. 14 வயதுக்குட்பட்ட மாணவிகளுக்கு கர்ப்ப வாய்  புற்றுநோய் தடுப்பூசி செலுத்தப்பட  உள்ளது. இத்திட்டம் மாநில  அளவில் அனைத்து மருத்துவ மனைகளிலும் மேற்கொள்ளப்பட உள்ளது” என்றார். மருத்துவ முதன்மை செயலா ளர் செந்தில்குமார், பொது சுகா தாரம் மற்றும் நோய்த் தடுப்புத் துறை இயக்குநர் செல்வவிநாய கம், சட்டப்பேரவை உறுப்பினர் கள் வி.ஜி.ராஜேந்திரன் (திரு வள்ளூர்), ஆ.கிருஷ்ணசாமி (பூந்த மல்லி), எஸ்.சந்திரன் (திருத்தணி), மாவட்ட சுகாதார அலுவலர் பிரியா ராஜ் உள்ளிட்டோர் கலந்து  கொண்டனர்.