“கட்சிக்குப் புதிதாக வந்தவர்கள், கட்சி யின் சர்வதேச மற்றும் தத்துவார்த்த நிலைபாடுகள் குறித்து சரிவர புரிந்து கொள்ளா மல் கட்சியை விமர்சிப்பதுண்டு. அச்சமயங் களில் அவர்களுடைய நிர்ணயிப்பு சரியற்றது என்பதைச் சுட்டிக்காண்பிப்பார். அவர்கள் புதிதாக கட்சிக்கு வந்திருக்கிறார்கள் என்பதை கண்ணியமாக சுட்டிக்காட்டி அவர்கள் சோர்ந்து போகாவண்ணம் விளக்கம் கொடுத்து சரியான வழியை எடுத்துக் கூறுவார்” என்று, மார்க்சிய இயக்கத்தின் மறைந்த மூத்த தலைவர், பி.ஆர்.பரமேஸ்வரனைப் பற்றி பெருமிதத்துடன் குறிப்பிடுகிறார் மற்றொரு மூத்த தலைவர் மைதிலி சிவராமன். எளிய தையல் தொழிலாளியான பி.ஆர்.பரமேஸ்வரன், கட்சியின் உறுப்பினராகி ஒன்றாக யிருந்த கம்யூனிஸ்ட் கட்சியில் மாவட்ட செயற் குழு உறுப்பினர் பொறுப்புக்கு உயர்ந்தார். பின்னர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் மாவட்டக்குழு உறுப்பினராகவும் மாவட்டச் செய லாளராகவும் மாநிலக் குழு உறுப்பினர் மற்றும் மாநில செயற்குழு உறுப்பினராகவும் ஆனார். 1984 ஆம் ஆண்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட அவர் 1988ஆம் ஆண்டு வரை அப்பொறுப்பில் தொடர்ந்து செயல்பட்டார். கட்சி அமைப்புப் பணிகளில் தனித்திறமை, விடா முயற்சி, மிக சிறிய காரியங்களைக் கூட கவனிக்கும் நுட்பம் போன்றவை அவரது அமைப்புத் திறமைக்கு அடிப்படையான ஒன்றாக அமைந்தது. கட்சி அமைப்பையும், அரசியலையும், அடிப்படைத் தத்துவத்தையும் இணைத்து செயலாற்றியது தான் அவர் புரிந்த சாதனைகளுக்கு ஆதாரமாக அமைந்தது. தத்துவார்த்தப் பிரச்சனைகளில் கட்சியைத் தொடர்ந்து ஈடுபடுத்தி வந்த தமிழ்நாட்டின் கட்சித் தலைவர்களில் தோழர் பி.ஆர்.பரமேஸ்வரன் முன்னணியில் இருந்தார். தமிழ் மொழியில், ‘மார்க்சிஸ்ட்’ தத்துவார்த்த மாத இதழை வெளிக் கொண்டு வருவதில் அவரது தனிப்பட்ட பங்களிப்பு குறிப்பிடத்தக்கது. 1967-75 ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் தோழர் வி.பி.சிந்தனும், தோழர் பி.ஆர்.பரமேஸ்வரனும், இரட்டைக் குழல் துப்பாக்கி போன்று செயல்பட்டு சென்னையில் கம்யூ னிஸ்ட் இயக்கம் முன்னேற வழி வகுத்தனர். கம்யூ னிஸ்ட் தொழிற்சங்கம் தோன்ற முடியாத தொழிற் கூடங்களுக்குள் ஊடுருவி ஒரு பரந்துபட்ட தொழிற்சங்க இயக்கத்தை உருவாக்க தோழர் வி.பி.சி. அரும்பாடுபாட்டார். அத்தகைய நேரத்தில் அவருக்கு உற்ற துணையாக இருந்து, எழுச்சி மிக்க அந்தத் தொழிலாளிகளிடையேயிருந்து முக்கிய ஊழியர்களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஈர்த்து கட்சி அமைப்பைக் கட்டியதில் தோழர் பி.ஆர்.பரமேஸ்வரனின் பங்கு மிகப்பெரியது.