tamilnadu

இறுதிமூச்சு வரை சமய நல்லிணக்க கருத்துக்களை பரப்பியவர் வள்ளலார் பெருந்தொண்டர் ஊரன் அடிகளார்

சென்னை, ஜூலை 15-  இறுதிமூச்சு வரை சமய நல்லிணக்கத்திற்கான கருத்துக்களை பரப்பியவர்  வள்ளலார் பெருந்தொண்டர் ஊரன் அடிகளார் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி புகழஞ்சலி செலுத்தி யுள்ளது. ஊரன் அடிகளார் மறைவு குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் வெளி யிட்டுள்ள இரங்கல் செய்தி வருமாறு: 

சமரச சன்மார்க்க சொற்பொழிவாளரும், வள் ளலார் பெருந்தொண்டரு மான ஊரன் அடிகளார் உடல் நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரி ழந்தார் என்ற செய்தி அறிந்து மிகுந்த வேதனையடைந் தோம். அவரது மறைவிற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயற்குழு தனது ஆழ்ந்த இரங்கலையும், அஞ்ச லியையும் தெரிவித்துக் கொள்கிறது. திருச்சியில் நகராட்சி நகரமைப்பு அதிகாரியாக இருந்த அவர் அப்பணியை துறந்து சமரச சன்மார்க்க ஆராய்ச்சி நிலையம் நிறுவி  தமிழ்ச் சமயங்கள் பற்றியும், சன்மார்க்க நெறி பற்றியும் ஆராய்ச்சி செய்தவர். 35  வயதில் துறவறம் பூண்டவர். அதற்கு பிறகு கடந்த  54 ஆண்டுகளாக சமரச சன்மார்க்க நெறிகளையும், வள்ளலார் புகழையும் பரப்பி வந்தார். தனது 89  வயது வரை தொண்டாற்றிய அவர், எழுத்து, பேச்சு,  நடிப்பு என பன்முகத் திற னுடன் பணியாற்றியுள்ளார். ஏராளமான நூல்களையும் எழுதியுள்ளார். தமிழக அரசின் வள்ளலார் விரு தினை 2020 ஆம் ஆண்டில் பெற்றுள்ளார். வடலூரே இவரது வாழ்விடமாக மாறி தனது இறுதிமூச்சு வரை சமய நல்லிணக்கத்திற்கான கருத்துக்களை பரப்பி வந்தவர்.

 ‘வாடிய பயிரை கண்ட போதெல்லாம் வாடினேன்’ என்று பாடிய வள்ளலார், தமிழக சமூகச் சீர்திருத்த வரலாற்றில் பெரும் புரட்சியை நிகழ்த்தியவர். ஆன்மீகப் பரப்புக்குள் நின்றுகொண்டே மூட நம்பிக்கைகளுக்கு எதி ராகவும், பெண்ணடிமைத் தனத்திற்கு எதிராகவும், சாதி, சமய வெறிகளுக்கு எதி ராகவும் பாடியது மட்டு மின்றி, நடைமுறைப்படுத்தி யும் காட்டியவர். அவர் வழி யில் வழுவாது நின்றவர் ஊரன் அடிகள்.

வள்ளலாரின் திருவருட் பாவை கால வரிசைப்படி தொகுத்து வெளியிட்டவர். வள்ளலாரின் வாழ்க்கை வரலாற்றை பெருநூலாக எழுதியுள்ளார். வள்ள லாரை பல்வேறு அறிஞர் பெருமக்களோடு ஒப்பிட்டு  அவர் எழுதிய நூல்கள் புகழ் பெற்றவை. வள்ளலாரின் சமரச சன்மார்க்க நெறியை  பரப்புவதையே தன்னுடைய வாழ் நெறியாக கொண்டி ருந்த அவர், மத நல்லிணக் கத்தை பரப்பும் தூதுவராக வும் செயல்பட்டார். வள்ள லார் குறித்த வரலாற்று ஆவ ணமாக அவர் திகழ்ந்தார். அவரது மறைவு தமிழ்ச் சமூகத்திற்கும், சமய நல்லி ணக்கத்தின் மீது பற்றுடைய அனைவருக்கும் ஏற்பட்ட  பேரிழப்பாகும். அவரது  மறைவால் துயருற்றுள்ள வள்ளலார் தொண்டர்களுக் கும், அன்பர்களுக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு தனது அனு தாபத்தையும், ஆறுதலை யும் தெரிவித்துக் கொள் கிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.