மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில மாநாடு நாளை (ஜன.3) விழுப்புரத்தில் பேரெழுச்சியுடன் துவங்குகிறது. இதையொட்டி கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் அளித்த நேர்காணல்: கேள்வி: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில மாநாடு விழுப்புரத்தில் நடைபெற உள்ள நிலையில் அதன் முக்கியத்துவம் என்ன? பதில்: தமிழகத்தில் நமது கட்சியின் கிளைகள், இடைக்குழுக்கள், மாவட்டக்குழுக் கள் மாநாடுகள் முடிவடைந்து மாநில மாநாடு நாளை (ஜன.3) துவங்குகிறது. நடைபெற்ற மாநாடுகள் கட்சியின் கடந்த மாநில மாநாடு, அகில இந்திய மாநாடுகள் தீர்மானித்த கடமை கள் அமலாக்கம் பற்றி விவாதித்து எதிர்கால கடமைகளை முடிவு செய்துள்ளன. கண்ணூர் கட்சி மாநாடு தொழிலாளர், விவசாயிகளின் வர்க்கப்போராட்டம் உள்ளிட்ட பல எதிர்கால கடமைகளை தீர்மானித்தது; அதை தமிழ்நாட்டில் அமலாக்கியது பற்றி, மாநில மாநாடு விரிவாக விவாதித்து, எதிர்காலக் கடமைகளை முடிவு செய்யவுள்ளது. கேள்வி: நீங்கள் சமீபத்தில் சில கட்சிக் கிளை மாநாடுகளில் கலந்து கொண்டீர்கள். எந்தெந்த கிளைகள் அவை? பதில்: அடிமட்ட நிலையில் கட்சியின் செயல்பாடுகளை நேரில் அறிந்து கொள்ள வடசென்னை, அசோக்லேலண்ட் தொழி லரங்க கட்சிக்கிளை மற்றும் மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் ஒன்றியம், காஞ்சிவாய் கிராம கட்சிக்கிளை ஆகிய இரண்டு கிளை மாநாடுகளில் கலந்து கொள்ளும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது.
கேள்வி: அசோக்லேலண்ட் தொழி லரங்க கிளை மாநாட்டில் என்னென்ன விவாதங்கள் நடைபெற்றன? பதில்: ஆகஸ்ட் 25, 2024 அன்று நடை பெற்ற வடசென்னை அசோக்லேலண்ட் தொழி லக கிளை மாநாட்டில் கட்சி கிளையின் 11 உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். வேலை அறிக்கை மீது விரிவான விவாதம் நடந்தது. நிறுவனத்தில் கடந்த கால கட்சி செயல்பாடு, தற்போதைய நிலை, தொழிலாளர்கள் எதிர் கொள்ளும் பிரச்சனைகள், தொழிற்சங்கத்தின் அணுகுமுறை உள்ளிட்ட அனைத்து அம்சங் களும் விவாதிக்கப்பட்டன. கேள்வி: அசோக்லேலண்ட் நிறு வனத்தில் கட்சியின் தொழிற்சங்க வரலாறு குறித்து கூறுங்கள்? பதில்: 1972இல் அசோக்லேலண்ட் நிறு வனத்தில் தொழிலாளர்கள் எழுச்சி ஏற்பட்டது. அதற்கு எதிராக நிர்வாகம் பணிநீக்கம், பழிவாங்கல் நடவடிக்கைகளில் ஈடுபட்டது. அந்தப் போராட்டத்தில் பங்கேற்று டிஸ்மிஸ் செய்யப்பட்ட தொழிலாளர்களில் ஒருவர்தான், பின்னர் தொழிற்சங்க இயக்கத்தின் முக்கியத் தலைவர்களில் ஒருவராகவும் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினராகவும் உயர்ந்த தோழர் ஏ.கே.பத்மநாபன் என்பது குறிப்பிடத்தக்கது. 1981ல் இந்த நிறுவனத்தில் 5,300 நிரந்தர தொழிலாளர்களும், 2,500 கான்ட்ராக்ட் தொழிலாளர்களும் வேலை செய்து வந்த னர். 1982ல் நடைபெற்ற தேர்தலில் தோழர் வி.பி.சிந்தன் (சிஐடியு) தலைவராக தேர்வு செய்யப்பட்டார். நிர்வாகம் மாதம் 100 கான்ட்ராக்ட் தொழிலாளர்களை வேலை நீக்கம் செய்ய முயன்றபோது, “ஒரு தொழிலாளியைக் கூட வெளியேற்ற அனுமதிக்க முடியாது” என்று கூறி சிஐடியு தலைமையிலான சங்கம் போராடி, அனைத்து கான்ட்ராக்ட் தொழிலாளர் களையும் நிரந்தரமாக்கியது. இதன் விளைவாக மொத்தம் 7,800 தொழிலாளர்கள் நிரந்தரத் தொழிலாளர்களாக மாறினர்.
கேள்வி: அப்போது கட்சியின் வளர்ச்சி எப்படி இருந்தது?
பதில்: 1982ல் தொழிலாளர்கள் மத்தியில் 3 கட்சிக் கிளைகளும், 30 கட்சி உறுப்பினர்களும் இருந்தனர். 1987ல் இது 6 கிளைகளாகவும், 65 உறுப்பினர்களாகவும் உயர்ந்தது. 1990ல் கட்சிக் கிளைகள் 12 ஆகவும், உறுப்பினர்கள் 120 ஆகவும் உயர்ந்தனர். ‘உழைப்போர் உரிமைக்குரல்’ என்ற இதழ் மூலம் தொழிலாளர்கள் மத்தியில் அரசியல் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. கேள்வி: தாராளமயக் கொள்கைகள் இந்த நிறுவனத்தை எப்படி பாதித்தன? பதில்: நாளடைவில் லேலண்ட் நிறு வனம் விரிவடைந்து மாநிலத்தின் பல பகுதி களில் கிளைகள் தொடங்கப்பட்டன. ஆனால் எண்ணூர் தொழிற்சாலையில் நிரந்தர தொழிலாளர்கள் செய்து வந்த பல பணிகள் அவுட்சோர்ஸ் செய்யப்பட்டன. புதிய தொழில் நுட்பங்களை புகுத்தி நிறுவனம் நவீனமய மாக்கப்பட்டது. இதனால் நிரந்தர தொழி லாளர்களின் எண்ணிக்கை 1,244 ஆக குறைந்தது. தற்போது 2,240 கான்ட்ராக்ட் தொழிலாளர்கள் உள்ளனர்.
கேள்வி: இந்த சூழலில் கட்சிக் கிளை என்ன திட்டமிட்டுள்ளது?
பதில்: நிர்வாகம் 746 நிரந்தர தொழி லாளர்களை உபரி என அறிவித்துள்ள நிலை யில், இதற்கு எதிராக தொழிலாளர்கள் மத்தியில் பிரச்சாரம் செய்யவும், 2,240 கான்ட்ராக்ட் தொழிலாளர்களை திரட்டி அவர்களை நிரந்தர மாக்க போராடவும் திட்டமிட்டுள்ளோம். கொரோனா காலத்தில் நிறுத்தப்பட்ட ‘உழைப் போர் உரிமைக்குரல்’ இதழை மீண்டும் தொடங்கவும் தோழர்கள் முடிவு செய்துள்ளனர். ஏற்கெனவே இந்நிறுவனத்தில் வேலை செய்யும் கேன்டீன் தொழிலாளர்கள் 110 பேரை சிஐடியு பொது தொழிலாளர் சங்கத்தின் உறுப்பினர்களாக்கி அவர்களுக்கு ஊதிய உயர்வு ஒப்பந்தத்தையும் வெற்றிகரமாக இத்தோழர்கள் நிறைவேற்றியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கேள்வி: காஞ்சிவாய் கிராமக் கிளை பற்றி சொல்லுங்கள்?
பதில்: காஞ்சிவாய் ஊராட்சியில் 1,400 வாக்காளர்களும், சுமார் 2,000 மக்கள் தொகையும் உள்ளனர். இது கம்யூனிஸ்ட் இயக்கத்தின் பாரம்பரிய கிராமம். கிளையில் 33 கட்சி உறுப்பினர்களில் 6 பேர் 31 வயதுக்கு உட்பட்டவர்கள். 63 குடும்பங்கள் (52 தலித், 11 பிற்படுத்தப்பட்டோர்) கட்சியின் அங்கமாக உள்ளன. கேள்வி: கிராமத்தில் வர்க்க அமைப்பு களின் நிலை என்ன? பதில்: விவசாய தொழிலாளர் சங்கத்தில் 400 உறுப்பினர்கள், விவசாயிகள் சங்கத்தில் 300 உறுப்பினர்கள், வாலிபர் சங்கத்தில் 300 உறுப்பினர்கள் உள்ளனர். கடந்த 3 ஆண்டுகளில் கிளை 16 முறை கூடி யுள்ளது. அகில இந்திய அளவிலான, மாநில அளவிலான இயக்கங்களில் கட்சி உறுப்பினர் களும் கட்சிக் குடும்பங்களும் முனைப்புடன் பங்கேற்கின்றனர். கேள்வி: காஞ்சிவாய் கிராமத்தில் கட்சி யின் வரலாற்று முக்கியத்துவம் என்ன? பதில்: சுதந்திரப் போராட்ட காலத்திலேயே இங்கு கம்யூனிஸ்ட் இயக்கம் தோன்றியது. தீண்டாமைக்கு எதிராக வீரமிக்க போராட்டங் கள் நடத்தப்பட்டன. 1948ல் கட்சித் தலைவர் களான சம்பா ராமசாமி, நல்லகண்ணு ஆகி யோர் சிறையில் அடைக்கப்பட்டனர். 1956 முதல் 1975 வரை நடந்த ஊராட்சித் தேர்தல் களில் கட்சி தொடர்ந்து வெற்றி பெற்றது. கேள்வி: காஞ்சிவாய் கிராமத்தில் கட்சித் தடைக் காலத்தில் தோழர்கள் எதிர்கொண்ட அடக்குமுறைகள் குறித்து கூறுங்கள். பதில்: 1948ல் கட்சித் தலைவர்களாக இருந்த சம்பா ராமசாமி, நல்லகண்ணு இரு வரையும் காவல்துறையினர் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். குறிப்பாக தோழர் சம்பா ராமசாமியின் முதுகில் துப்பாக்கி பயனட்டால் குத்தி ஏற்பட்ட காயத்தில் புழு விழுந்தது. சிறைக் காவலர்கள்தான் அவரது காயத்தை ஆற்ற உதவி செய்தனர்.
கேள்வி: கிராமத்தின் வளர்ச்சியில் கட்சியின் பங்களிப்பு என்ன?
பதில்: கட்சியின் போராட்டங்களால் நடுநிலைப் பள்ளி, ஆரம்ப சுகாதார நிலை யம், அரசு நூலகம், ரேஷன் கடை, நெல் கொள்முதல் மையம், கிராம சேவை மையம், இரண்டு சமுதாயக் கூடங்கள் ஆகியவை அமைக்கப்பட்டன. இன்றும் ரேஷன் கடையில் தரமான அரிசி விநியோகம், சாலை வசதி, மாற்றுத் திறனாளிகள் கோரிக்கைகள், நூறு நாள் வேலை திட்டம் உள்ளிட்ட கோரிக்கை கள் மீது தொடர்ந்து இயக்கங்கள் நடத்தப்படு கின்றன. கேள்வி: கிராமத்தில் சாதி ஒழிப்புப் போராட்டங்களில் கட்சியின் பங்கு எப்படி இருந்தது? பதில்: 1940-50களில் நீடித்து வந்த தீண்டாமை கொடுமைகளுக்கு எதிராக கம்யூனிஸ்டுகள் வீரமிக்க போராட்டத்தை நடத்தினர். தோழர் நல்லகண்ணு பிற்படுத்தப் பட்ட சாதியைச் சேர்ந்தவர், தோழர் சம்பா ராம சாமி பட்டியலின வகுப்பைச் சேர்ந்தவர். இரு வரும் கட்சித் தடைக் காலத்தில் சிறையில் அடைக்கப்பட்டு விடுதலையான போது, கிராமம் முழுவதும் சாதி வேறுபாடின்றி வரவேற் றது. அக்காலத்தில் அனைத்து சாதி மக்களும் கம்யூனிஸ்ட் கட்சியில் அங்கம் வகித்தனர்.
கேள்வி: தற்போது கிராமத்தில் கட்சி எதிர்கொள்ளும் சவால்கள் என்ன?
பதில்: விவசாயிகள், விவசாயத் தொழி லாளர்களின் கோரிக்கைகள் மீது வர்க்கப் போராட்டம் நடத்துவதற்கான செயல்திட்டங்கள் பற்றி போதிய விவாதம் இல்லை என்பதை சுய விமர்சனமாக தோழர்கள் சுட்டிக்காட்டினர். மேலும், பல காரணங்களால் பிற்படுத்தப்பட்ட சமூகத்தினரில் பலரும், பட்டியலின மக்களில் ஒரு பகுதியினரும் தற்போது நமது இயக்கத் தோடு இல்லை என்பது கவலை அளிக்கிறது. அவர்களை வென்றெடுப்பதற்கான திட்ட மிடலை கட்சித் தோழர்கள் மேற்கொள்கின்றனர். கேள்வி: பெண்கள் பங்கேற்பு குறித்து என்ன திட்டங்கள் உள்ளன? பதில்: 63 கட்சிக் குடும்பங்களில் உள்ள பெண்களை கட்சி உறுப்பினர்களாக ஆக்குவதற்கு வாய்ப்பிருந்தும் இதுவரை அது நடைபெறவில்லை. அவர்களை கட்சிக்குள் கொண்டு வருவதோடு மாதர் சங்கக் கிளையும் உருவாக்க வேண்டும் என்று மாநாடு முடிவு செய்துள்ளது. கேள்வி: எதிர்காலத்திற்கான கட்சியின் திட்டங்கள் என்ன? பதில்: சாதி வேறுபாடின்றி அனைத்து பகுதி மக்களும் ஒன்றிணைந்து போராடியதால்தான் கிராமத்தில் தீண்டாமைக் கொடுமை ஒழிக்கப்பட்டது, அரசு நலத்திட்டங்களை கொண்டு வர முடிந்தது. எதிர்காலத்தில் அனைத்து பிரிவு மக்களையும் வர்க்க வெகுஜன அமைப்புகளுக்குள் திரட்டுவதோடு, 1940-50களில் இருந்தது போல மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை பலம் பொருந்திய இயக்கமாக உருவாக்குவது என்றும் கிளை நம்பிக்கையோடு முடிவு செய்துள்ளது.
கேள்வி: கிராமத்தில் கட்சியின் எதிர்கால இலக்குகள் குறித்து கிளைச் செயலாளர்கள் என்ன கூறுகிறார்கள்?
பதில்: தேர்ந்தெடுக்கப்பட்ட கிளைச் செய லாளர்கள் இருவரும் நன்றி தெரிவிக்கும் போது, காஞ்சிவாய் கிராமத்தில் உள்ள மூன்று கிளைகளும் இணைந்து செயல்பட்டு, இக்கிரா மத்தை மீண்டும் கம்யூனிஸ்ட் கட்சியின் கோட்டை யாக மாற்றுவோம் என்று உறுதியளித்தனர். கேள்வி: இன்றைய சூழலில் கட்சியின் வலிமை குறித்து என்ன கருதுகிறீர்கள்? பதில்: தொழிற்சாலைகளிலும் கிராமங்களி லும் கட்சியின் அடித்தளம் வலுவாக உள்ளது. தாராளமயக் கொள்கைகளால் தொழி லாளர்கள் எதிர்கொள்ளும் சவால்களையும், கிராமப்புறங்களில் நிலவும் சமூக ஒடுக்குமுறைகளையும் எதிர்கொள்ள நமது கட்சி தயாராக உள்ளது. அசோக்லேலண்ட் போன்ற தொழிற்சாலைகளில் ஒப்பந்தத் தொழி லாளர்களை அணிதிரட்டும் புதிய முயற்சி களும், காஞ்சிவாய் போன்ற கிராமங்களில் அனைத்து பிரிவு மக்களையும் ஒன்றிணைக் கும் முயற்சிகளும் நம்பிக்கை தருகின்றன. கட்சியின் இளம் தலைமுறை உறுப்பினர்கள், பெண்கள் பங்கேற்பு, வர்க்க அமைப்புகளின் வளர்ச்சி என அனைத்து அம்சங்களிலும் முன்னேற்றம் காண்கிறோம். 1940-50களில் நமது முன்னோடிகள் காட்டிய தியாக உணர் வோடு, இன்றைய சவால்களை எதிர்கொண்டு, புதிய வெற்றிகளை நோக்கி பயணிப்போம் என்ற நம்பிக்கை உறுதியாக உள்ளது.