tamilnadu

img

இளைய தலைமுறையையும் ஈர்க்கும் கம்யூனிஸ்ட் கட்சி

இளைய தலைமுறையையும் ஈர்க்கும்  கம்யூனிஸ்ட் கட்சி

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24-ஆவது அகில இந்திய மாநாடு மதுரையில் ஞாயிறன்று பேரணி - பொதுக்கூட்டத்துடன் நிறைவுபெற்றது. முகநூல், எக்ஸ், இன்ஸ்டாகிராம், இணையதளங்கள் என எதைத் திறந்தாலும் மாநாடு குறித்த தகவல்கள் தான். இதில் இன்னொரு விஷேசம், சிபிஎம் மாநாடு இளைய தலைமுறையையும் ஈர்த்திருப்பது தான்... அதற்கு உதாரணம் தான், சமூகவலைதளத்தில் முற்போக்கான கருத்துக்களை வைரலாக்கும் ரீல்ஸ்-களுக்கு சொந்தக்காரரும்- மதுரையைச் சேர்ந்த துடிப்புமிக்க இளம்பெண்ணுமான ஸ்ரீநிதி இன்ஸ்டாகிராமில் வெளியிட்டிருக்கும் (https://www.instagram.com/reel/DH5SYhOv6TL/?igsh=N21xazA2c2JhczJq) ரீல்ஸ் பதிவாகும். “செஞ்சட்டை அணிந்து, செங்கொடியை கையிலேந்தி செம்படைப் பேரணியில் செல்வதற்குக் கொடுத்து வைத்திருக்க வேண்டும். இதற்கான வாய்ப்பு அனைவருக்கும் கிடைக்காது. அதற்கும் ஒரு தகுதி உண்டு. எனது தாத்தா கம்யூனிஸ்ட் கட்சிக்காரர். அவர் என்னிடம் கூறுவார், கம்யூனிஸ்ட் கட்சி மாநாடு, பொதுக்கூட்டம் எங்கு நடந்தாலும் அம்மாச்சியிடம் சொல்லி சோற்றைக் கட்டி எடுத்துச் செல்வேன். ஏனென்றால் அது மக்களுக்கான இயக்கம். செங்கொடியில் உள்ள சிவப்பு பலரின் ரத்தம் என்பார்” “ஞாயிற்றுக்கிழமை விடுமுறையில் நாம் சுதந்திரமாக இருப்பதற்கும், போனஸ் கிடைத்ததற்கும் செங்கொடி தான் காரணம். உங்க ஊருக்கு பஸ் வரவில்லையா? கிராமத்தில் தண்ணீர் வரவில்லையா? அதற்காகப் போராடுபவர்களில் சிவப்பு துண்டுக்காரன் இருப்பான். ஆளுங்கட்சியாக இருந்தாலும், எதிர்க்கட்சியாக இருந்தாலும், கூட்டணி வைத்திருந்தாலும் சட்டமன்றத்திலும், நாடாளுமன்றத்திலும் தப்பை, தப்பென சொல்வது கம்யூனிஸ்ட்காரன் தான்” என்று கூறுகிறது.. எவ்வளவு தத்ரூபமான படப்பிடிப்பு. இந்த வீடியோவும் வழக்கம் போல வைரலாகி இருக்கிறது. இன்றைய இளைஞர்கள் - இளம்பெண்களும் கம்யூனிஸ்ட் கட்சியை, கம்யூனிஸ்டுகளை, அவர்களின் அர்ப்பணிப்பு மிக்க உழைப்பைத் தியாகத்தை உணர்ந்தே இருக்கிறார்கள்.. என்பது சோசலிசமே எதிர்காலம்! என்ற நம்பிக்கையை அளிக்கிறது.