tamilnadu

img

கனியாமூர் பள்ளியில் விடுதி நடத்த அனுமதி பெறவில்லை

கள்ளக்குறிச்சி, ஜூலை 21- சின்னசேலம் கனியாமூரில் உள்ள தனியார் பள்ளியில் கடந்த  ஜூலை 13-ஆம் தேதி பன்னி ரண்டாம் வகுப்பு மாணவி மர்ம மான முறையில் இறந்துள்ளார். இந்தப் பள்ளியில் செயல்படும்  விடுதிக்கு அரசு அனுமதியளிக்க வில்லை. அனுமதியின்றி இயங்கி வருவதாக தமிழ்நாடு குழந்தை கள் உரிமைகள் பாதுகாப்பு  ஆணை யம் (டிஎன்சிபிசிஆர்) வியாழக் கிழமை தெரிவித்துள்ளது. கள்ளக்குறிச்சியில், செய்தி யாளர்களிடம் பேசிய ஆணை யத்தின் தலைவர் சரஸ்வதி ரங்க சாமி, “பள்ளி விடுதி நடத்துவதற்  கான உரிமம் பெறப்படவில்லை. அடிப்படை நிபந்தனைகளை மீறி பள்ளி வளாகத்தில் விடுதி நடந்து வருகிறது. விடுதி வசதியுடன் கூடிய அனைத்து நிறுவனங்களும் உரி மம் பெற விண்ணப்பிக்க வேண்டு மென மாவட்ட நிர்வாகம் உத்த ரவிட்டிருந்தும், பள்ளி விதிமுறை களைப் பின்பற்றவில்லை. “இது எங்கள் ஆய்வின் போது கண்ட றியப்பட்டது” என்றார். முன்னதாக, சரஸ்வதி ரங்க சாமி ஆணைய உறுப்பினர்களு டன் சென்று கல்வித் துறை அதி காரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். விசாரணைகளின் விவரங்கள் கல்வி அதிகாரிகளு டன் பகிர்ந்து கொள்ளப்பட்டதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரி வித்தன. தேசிய குழந்தைகள் உரி மைகள் பாதுகாப்பு ஆணையம் (NCPCR) ஜூலை 27-ஆம் தேதி  சின்னசேலம் கனியாமூர் பள்ளி யை ஆய்வு செய்ய உள்ளது.