சென்னை, மார்ச் 19- பெரிய ஏமாற்றமும் சிறிய வரவேற்பும் உடைய பட்ஜெட் என தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக் கான சங்கம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சங்கத்தின் மாநிலத் தலைவர் பா.ஜான்சி ராணி, பொதுச்செயலாளர் எஸ். நம்புராஜன் ஆகியோர் வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறி யிருப்பதாவது: சட்டப்பேரவையில் வெள்ளி யன்று (மார்ச் 18) சமர்ப்பிக்கப் பட்ட 2022-23 நிதிநிலை அறிக்கை மாற்றுத்திறனாளிகளுக்கு பெரிய ஏமாற்றத்தையும், சிறிய வரவேற்பையும் உடையதாக உள்ளது. குறிப்பாக சட்ட உரி மைகளை முன்னெடுக்க தமிழக நிதிநிலை அறிக்கையில் முயற்சிக் காதது வெளிப்படுகிறது. ரூ.838 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள் ளது. கடந்த ஆண்டைவிட ரூ.25 கோடி மட்டுமே உயர்வு.
ஏமாற்றம்
பொதுப் போக்குவரத்துகள் 5 ஆண்டுகளுக்குள் மாற்றுத் திறனாளிகள் பயன்படுத்தும் வகையில் மாற்றியமைக்க வேண் டும் என்பன உள்ளிட்ட 2016 உரி மைகள் சட்ட விதிகளை அமல்படுத்த நிதி நிலை அறிக்கை கண்டுகொள்ளாதது சட்டத்தை அவமதிக்கும் செயலே ஆகும். கட்டிடங்கள், முதியோர், விதவை, மாற்றுத்திறனாளி உள்ளிட்டோருக்கு வழங் கப்படும் சமூகப்பாதுகாப்பு திட்டத்திற்கு ரூ.4,816 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டை காட்டிலும் சுமார் ரூ.8 கோடி மட்டுமே உயர்வு. அண்டை மாநிலங்களில் ரூ.3,000க்கு மேல் உதவித்தொகை வழங்கப்படும் நிலையில், தமிழகத்திலும் அதற்கு ஈடாக உயர்த்த நிதிநிலை அறிக்கை முயற்சிக்காதது மாற்றுத்திறனாளிகளின் அதி ருப்தியையும் வருத்தத்தையும் அதிகரித்துள்ளது.
வரவேற்பு
சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மனநல காப்பகத்தை மேம்படுத்த ரூ.40 கோடி ஒதுக்கீடு செய்துள் ளது வரவேற்கத்தக்கது. தனியார் தொண்டு நிறுவன சிறப்பு பள்ளிக ளில் பணியாற்றும் சிறப்பாசிரியர், மறுவாழ்வு பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ.14 ஆயிரத்திலிருந்து, ரூ.18 ஆயி ரமாக உயர்த்துவது வரவேற்கத் தக்கது என்றாலும், ஊதியத்தை பணியாளர்களின் வங்கிக் கணக்குகளில் நேரடியாக அரசு செலுத்தி, தொண்டு நிறுவன அதி காரிகளின் கூட்டு முறைகேடு களை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தொண்டு நிறுவன திட்டங்களை முறைப்படுத்துக!
தொண்டு நிறுவனங்கள் மூலம் செயல்படுத்தப்படும் பல திட்டங் கள் பெயரளவிற்கும், அதிகாரி கள் ஊழல் செய்வதற்குமான திட் டங்களாகவே உள்ளன. பொருத்த மான ஓய்வுபெற்ற நீதிபதிகள், மனித உரிமை மற்றும் மாற்றுத் திறனாளி உரிமை ஆர்வலர்களை கொண்ட குழுக்களை அமைத்து முறையாக ஆராய்ந்து செயல்படுத்த தமிழக அரசு முன்வர வேண்டும். இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.