சென்னை, பிப்.6- நீட் தேர்விலிருந்து விலக்கு பெறுவதுதான் எங்களின் முழு நோக்கம் எனவும் அனைத்துக் கட்சிக் கூட்டத்தை அதிமுக புறக்கணித்தது ஆளுநரை ஆதரிக்கும் போக்காகவே பார்க்க முடிகிறது எனவும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார். நீட் விலக்கு மசோதாவை குடியரசு தலைவருக்கு அனுப்பாமல், தமிழக அரசுக்கே ஆளுநர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பியுள்ள நிலையில், அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து விவாதிக்க சட்டமன்ற அனைத்து கட்சியினருடன் முதல்வர் ஸ்டாலின் அவர்கள் சனிக்கிழமையன்று ஆலோ சனையில் ஈடுபட்டார். ஆனால், இந்த அனைத்துக்கட்சி கூட்டத்தில் அதிமுக, பாஜக மற்றும் புரட்சி பாரதம் ஆகிய கட்சிகளை தவி ர்த்து, மற்ற கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர். இதனையடுத்து, அதிமுகவை பொறுத்தவரை நீட் தேர்வு ரத்து செய்யப்பட வேண்டும்
என்பதில் உறுதியாக உள்ளதாகவும், எனவே, நீட் தேர்வு ரத்து தொடர்பாக எடுக்கப்படும் அனைத்து சட்டப்படியான நடவடிக்கையையும் அதிமுக ஆதரிக்கும் என்றும் ஓபிஎஸ் தெரிவித்தார். இந்நிலையில், சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய மருத்து வம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், ‘‘அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பங்கேற்காமல் அதிமுக புறக்கணித்தது ஆளுநரை திருப்திப்படுத்தும் செய லாகத்தான் பார்க்க முடிகிறது. மேலும், சமூக அக்கறை உள்ள வர்களை ஒன்றிணைக்கவே முதல்வர் மு.க.ஸ்டாலின் சமூக நீதி கூட்ட மைப்பை அறிவித்தார். ஆனால், சமூக நீதி கூட்டமைப்பிற்கு தன்னை தலைவர் என முதல்வர் கூறவில்லை என்பதை அதிமுகவினர் புரிந்து கொள்ள வேண்டும். மேலும், நீட் தேர்விலிருந்து விலக்கு பெறு வதுதான் எங்களின் முழு நோக்கம்’’ என்று தெரிவித்தார்.