காரைக்குடி, பிப்.8- அறுபதாண்டுகளாய் தமிழின் ஒளிவிளக்காய் ஒளிர்ந்து வரும் காரைக்குடி இராமசாமி தமிழ்க் கல்லூ ரியில், பிப்ரவரி 8 - சனிக்கிழமை பகல் பொழுது உணர்வுகளின் வெள்ளம் பெருக்கெடுத்தது. மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் அவர்களுக்கான பாராட்டு விழா அது. “இங்கிருந்துதான் என் போராட்ட வாழ்க்கை தொடங்கியது” - சண்முகத்தின் கண்களில் நினைவு களின் மின்னல்கள். கல்லூரி செயலர் வீரப்பன் தலைமையில் நடைபெற்ற விழாவில், கல்லூரி முதல்வர் சே.நாக நாதன் வரவேற்புரை நிகழ்த்தினார். முன்னாள் முதல்வர்களான முருக சாமி, வள்ளி ஆகியோர் முதல், மன்னர் மேல்நிலைப் பள்ளியின் முன்னாள் தலைமையாசிரியர் மாதவன், அழ கப்பா பல்கலைக்கழக தேர்வுக் கட்டுப் பாட்டு ஆணையர் ஜோதிபாசு வரை - ஒவ்வொரு முகமும் வரலாற்றின் சாட்சிகள். “கட்சித் தோழர்கள் கூட ஆச்ச ரியப்பட்டார்கள் - கல்லூரியில் பாரா ட்டு விழாவா என்று” - சண்முகம் புன்ன கையுடன் நினைவு கூர்ந்தார்.
சிபிஎம் மாவட்டச் செயலாளர் அரு. மோகன், தாலுகா குழு செயலாளர் அழகர்சாமி, மூத்த தோழர் சித்திரவேலு, திராவி டக் கழக மாவட்டத் தலைவர் சாமி திரா விட மணி என கட்சி சார்ந்த தோழர் களும் திரண்டிருந்தனர். “இது என் தாய் வீடு” - சண்முகத் தின் வார்த்தைகளில் நெகிழ்ச்சி. ஒரு காலத்தில் மாணவராக நடந்த வளா கத்தில், இன்று மாநிலத்தின் முக்கிய அரசியல் தலைவராக நிமிர்ந்து நிற்கும் பெருமிதம். அவர் பேசத் தொடங்கி னார் - தமிழ் மொழியின் ஆட்சி மொழி அந்தஸ்து முதல், சமகால அரசியல் பிரச் சனைகள் வரை விரிந்தது அவரது பார்வை. “பல ஆளுமைகளை உருவாக் கிய இக்கல்லூரி, இன்று என்னைப் பாராட்டுவதில் பெருமையடைகி றேன்” - அவர் குரலில் நன்றியுணர்வு தழுதழுத்தது. அழைப்பிதழைப் பார்த்தபோது கூட நம்ப முடியவில்லை என்றார் - கல்லூரியே நேரடியாக ஏற் பாடு செய்திருந்த இந்த மாலை, அவர் வாழ்வின் மறக்க முடியாத தருணமாக மாறியது. தமிழ் மொழியின் வளர்ச்சிக்காக போராடிய மாணவர், இன்று அதே தமிழ்க் கல்லூரியில் ஓர் அரசியல் இயக்கத்தின் மாநிலத் தலைவராக கௌரவிக்கப்படும் தருணம் - வர லாற்றின் அழகிய திருப்பம். காரைக்குடி இராமசாமி தமிழ் கல்லூரியின் வரலாற்றில் மற்றுமொரு பொன்னேடு சேர்ந்தது. (ந.நி)