tamilnadu

img

கார்ப்பரேட் கம்பெனிகள் ஈட்டும் லாபத்தில் காபி விவசாயிகளுக்கும் பங்கு வழங்கிடுக!

திண்டுக்கல், மே 17-  கார்ப்பரேட் காபி கம்பெனிகள்  ஈட்டும் லாபத்தில் காபி விவசாயி களுக்கும் ஒரு குறிப்பிட்ட அளவு  பங்கு தொகை கொடுக்க சட்டத்  தில் திருத்தம் கொண்டு வர  வேண்  டும் என்று காபி விவசாயிகள் சங்  கத்தின் மாநில மாநாடு கோரிக்கை விடுத்துள்ளது.  கொடைக்கானல் வட்டம் பண்ணைக்காட்டில் புதனன்று தமிழ்நாடு காபி விவசாயிகள் சங்  கத்தின் மாநில மாநாடு நடை பெற்றது. மாநாட்டிற்கு காபி விவ சாயிகள் சங்கத்தின் மத்தியக்குழு உறுப்பினர் எம்.செல்லையா தலைமை வகித்தார். திண்டுக்கல் மாவட்டத்தலைவர் எல்.கண்ணன்  வரவேற்றார். அகில இந்திய  பொதுச்செயலாளர் கே.கிருஷ்ண பிரசாத் மாநாட்டை துவக்கி வைத்து உரையாற்றினார். மாநி லச் செயலாளர் டி.ரவீந்திரன் அறிக்கை சமர்ப்பித்தார்.   விவ சாயிகள் சங்க மாவட்டச்செயலா ளர் எம்.ராமசாமி,  மாவட்டத்தலை வர் என்.பெருமாள்,  தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்க மாவட் டச்செயலாளர் தா.அஜாய்கோஷ்  ஆகியோர் பேசினர். 

புதிய நிர்வாகிகள்

மாநாட்டில் புதிய மாநில  நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்ட னர். மாநிலத்தலைவராக கே. குஞ்சுமுகமது, மாநில பொதுச்  செயலாளராக எம்.செல்லையா, மாநிலப் பொருளாளராக தர்ம லிங்கம், உதவித்தலைவராக சின் னையன், உதவி செயலாளராக அண்ணாமலை உள்பட 18 பேர்  கொண்ட மாநிலக்குழு தேர்ந்தெ டுக்கப்பட்டது.  தமிழ்நாடு விவசாயி கள் சங்கத்தின் மாநிலத் தலை வர் பெ.சண்முகம் நிறைவுரையாற் றினார்.    காபி வாரிய சட்டத்தில் திருத்  தம் செய்து, காபி விவசாயிகளிடமி ருந்து காபியை கொள்முதல் செய்ய  வேண்டும். கார்ப்பரேட் காபி கம்  பெனிகள் ஈட்டும் லாபத்தில் விவ சாயிகளுக்கு குறிப்பிட்ட பங்கு தர வேண்டும் என்று சட்டத் திருத்தம் கொண்டு வர வேண்டும். இடைத்  தரகர்களின்றி காபியை நேரடியாக கொள்முதல் செய்ய கூட்டுறவு விற்  பனை மையங்கள் அமைத்து செயல்படுத்த வேண்டும். ஒன்றிய  அரசு காபி விவசாயிகளுக்கு கூடு தல் நிதி ஒதுக்கிட வேண்டும். அனைத்து காபி விவசாயிகளுக்கும் நீர் பாச னம், உரம், பூச்சிமருந்து, உபகர ணங்கள், கடன் ஆகியவை மானி யத்தில் வழங்க வேண்டும். நிலப்  பட்டா இல்லாத மலை வாழ் மக்க ளின் அனுபவ நிலங்களுக்கும் அடங்கல் அடிப்படையில் மானி யம் வழங்க வேண்டும். தமிழ்நாடு  அரசு, மலை மக்கள் காபி மேம் பாட்டுத் திட்டத்தை உருவாக்கி காபி போர்டுடன் இணைந்து செயல்படுத்திட வேண்டுகிறோம். மாநில அரசு ஆண்டுக்கு குறைந்  தது ரூ.10 கோடி வரை நிதி ஒதுக்கி  உதவி வழங்க வேண்டும். வன  விலங்குகளால் நிகழும் உயிர் சேதம், பயிர்ச் சேதங்களுக்கு கூடு தலாக இழப்பீடு வழங்க வேண் டும். வன விலங்குகள் பயிர்களை அழிப்பதை தடுத்திட வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். 2006 வன உரிமைச் சட்டத்தை முழுமையாக அமலாக்கிட வேண்டும்  என்று வலியுறுத்தி மாநாட்டில் தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.        (ந.நி)