சென்னை, மார்ச் 27 - மார்ச் 28, 29 அகில இந்திய வேலை நிறுத்தம் கூட்டுறவு சங்க ஊழியர்கள் பங்கேற்க அனைத்து தொழிற்சங்க கூட்ட மைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது. ஒன்றிய மோடி அரசின் மக்கள் விரோத, தொழிலாளர், விவசாயிகள் விரோத கொள்கைகளை கண்டித்து மார்ச் 28, 29 தேதிகளில் அகில இந்திய வேலை நிறுத்தம் நடைபெறுகிறது. இதனையொட்டி தொமுச, சிஐடியு, ஏஐடியுசி, ஐஎன்டியுசி உள்ளிட்ட அனைத்து கூட்டுறவு தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பும் நடைபெற்றது. தமிழ்நாடு கூட்டுறவு ஊழியர் சம்மே ளன தலைவர் ஆ.கிருஷ்ணமூர்த்தி தலைமை யில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், தொமுச மாநில செயலாளர் இரா.பொன்னுராம், தமிழ்நாடு கூட்டுறவு ஊழியர் சம்மேளன மாநில பொதுச்செயலாளர் என்.ஆர்.ஆர்.ஜீவானந்தம், ஏஐடியூசி மாநில செயலாளர் வி.ஆதிமூலம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்தில், தொழிலாளர் விரோத 4 சட்டத் தொகுப்புகளை திரும்ப பெற வேண்டும், மின்சார திருத்த சட்டத்தை கைவிட வேண்டும், விவசாயிகள், விவசாய தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிறை வேற்றிட வேண்டும், விலைவாசி உயர் வினை கட்டுப்படுத்த வேண்டும், பொது விநி யோக திட்டத்தினை பாதுகாத்திட வேண்டும், ஏழை எளிய மக்களுக்கான கூட்டுறவு அமைப்புகள் மாநில அரசின் கட்டுப்பாட் டிலேயே இயங்கிட வேண்டும், பொது விநி யோக திட்டத்திற்கு தனித்துறை அமைத்திட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கை களை வலியுறுத்தி 2 நாள் வேலைநிறுத்தம் நடைபெறுகிறது. இதில், கூட்டுறவு நிறுவன ஊழியர்கள் திரளாக பங்கேற்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.