tamilnadu

img

ஆக.12 வேலை நிறுத்தம்: கூட்டுறவு வங்கி ஊழியர் சம்மேளனம் அறிவிப்பு

சென்னை, ஜூலை 23 - ‘தமிழ்நாடு வங்கி’யை உருவாக்க  கோரி ஆக.12 அன்று வேலை நிறுத்தம்  நடைபெறும் என்று கூட்டுறவு வங்கி  ஊழியர் சம்மேளனம் அறிவித்துள் ளது. ‘தமிழ்நாடு வங்கி’ வங்கியை உருவாக்குவதற்கான வழிகாட்டு நெறி முறைகளை ரிசர்வ் வங்கி வெளி யிட்டுள்ளது. பல மாநிலங்களில் இணைக்கப்பட்ட கூட்டுறவு வங்கிகள் நல்ல வளர்ச்சி கண்டுள்ளன. எனவே, தமிழ்நாட்டில் 1200 கிளைகளோடு செயல்பட்டு வரும் மாநில தலைமை கூட்டுறவு வங்கி, 23 மாவட்ட கூட்டு றவு வங்கிகளை இணைத்து ‘தமிழ்நாடு  வங்கி’யை உருவாக்க வேண்டும். மேலும், பல்வேறு பெயர்களில் இயங்கும் நகரக் கூட்டுறவு வங்கி களை மாவட்ட அளவில் இணைத்து பலப்படுத்த வேண்டும் என வலி யுறுத்தி சனிக்கிழமையன்று (ஜூலை 23) வள்ளுவர் கோட்டம் அருகே தர்ணா போராட்டம் நடைபெற்றது. கூட்டுறவு வங்கி ஊழியர் சம்மேள னம் சார்பில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில், 2015 முதல் பணியமர்த்தப்பட்ட ஊழியர்களின் பணிமூப்பு பட்டியலை வெளியிட வேண்டும். தேக்கமடைந்துள்ள 500-க்கும் மேற்பட்ட உதவி மேலாளர் பதவிகளை நிரப்ப வேண்டும். மாவட்ட மத்திய வங்கி ஊழியர்கள், நகரக் கூட்டுறவு வங்கி ஊழியர்களின் ஒப்பந்த பேச்சுவார்த்தையை உடனே துவக்க வேண்டும். ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கான ஓய்வூதியத்தை 10 ஆயிரம் ரூபாயாக உயர்த்த வேண்டும் என்பன உள்ளிட்ட 17 அம்ச கோரிக்கைகள் போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.

இந்தப் போராட்டம் குறித்து செய்தி யாளர்களிடம் பேசிய சம்மேளனத்தின் தலைவர் தி.தமிழரசு, “தமிழ்நாடு வங்கி தொடங்கினால் விவசாய கடன்களுக்கான வட்டி பெருமளவு  குறையும். அனைத்து கூட்டுறவு  வங்கிகளும் லாபம் ஈட்டக்கூடியவை களாக மாறும். 2019ல் கேரள அரசால் ஒரு மாநில கூட்டுறவு வங்கி உருவாக்கப்பட்டது. 2 வருடத்தில் அதன் மொத்த வரவு செலவு சுமார்  ஒரு லட்சம் கோடி ரூபாயாக மாறியது.  கேரளாவை விட தமிழகத்தில் கூட்டுறவு வங்கிகள் அதிகம். எனவே, இதனை செய்தால் அரசுக்கு லாபம் கிடைக்கும்” என்றார். ரூ.200 கோடி லாபம் “மாநிலத்தில் உள்ள 127 நகரக் கூட்டுறவு வங்கிகளில் 25 வங்கிகள் நட்டத்தில் இயங்குகின்றன. அந்தந்த மாவட்டங்களில் உள்ள வங்கிகளை ஒரே வங்கியாக இணைத்து செயல் படுத்தினால் சேவை அதிகமாகும்; ஆண்டுக்கு 200 கோடி ரூபாய் லாபம்  கிடைக்கும். அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்களுக்கு இயக்குநர் பதவி தர வேண்டும் என்பதால் இதனை செய்ய மறுக்கின்றனர். மக்கள் நல னோடு இதை அரசு பரிசீலிக்க வேண்டும்” என்று கூறிய தி.தமிழரசு, “17 அம்ச கோரிக்கைகளை வலி யுறுத்தி ஆக.12 அன்று வேலை நிறுத் தம் நடைபெறும்” என்றார். இந்தப் போராட்டத்தை ஃபெபி அகில இந்திய செயலாளர் கே.கிருஷ் ணன் தொடங்கி வைத்தார். கூட்டுறவு வங்கி ஊழியர் சம்மேளன பொதுச் செயலாளர் இ.சர்வேசன் கோரிக்கை களை விளக்கி பேசினார். சிஐடியு மாநிலத் தலைவர் அ.சவுந்தரராசன் போராட்டத்தை ஆதரித்து பேசினார். சம்மேளன உதவித் தலைவர் எம்.ராஜகேசி நன்றி கூறினார்.